தனியே வசித்து வந்த தம்பதி! கண்காணித்து கொள்ளை!

robbery
robbery

தனியே வசித்த முதிய தம்பதிகளை கட்டி போட்டு விட்டு, வீட்டிலிருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்

மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் உள்ள பாஷனின் பட்டு பஞ்சாவதி பகுதியில் ஒரு வயதான பெண்மணி தன்னுடைய பக்கவாதம் பாதித்த கணவரோடு வசித்து வந்தார்.

அவரின் மூன்று மகன்களும் படித்து விட்டு வெளிநாடுகளிலும், வெளி மாநிலங்களிலும் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் தங்களின் தாயையும் தந்தையும் யார் கவனிப்பது என்று போட்டி போட்டு கொண்டு தனியே விட்டு சென்று விட்டார்கள். அதன் பிறகு இந்த முதிய தம்பதிகள் பணத்தை வைத்து கொண்டு, ஒரு வேலைக்காரரை உதவிக்கு வைத்துக்கொண்டு தனியே வசித்து வந்தார்கள் .

இதை அந்த பகுதியிலிருக்கும் சிலர் நோட்டமிட்டு வந்துள்ளார்கள். அதனால் அவ்ரகள் அந்த வீட்டில் புகுந்து கொள்ளையடிக்க திட்டமிட்டார்கள்.
அவர்களின் திட்டப்படி புதன்கிழமை மாலை 7.30 மணியளவில் சில கொள்ளையர்கள் அந்த வீட்டினுள் புகுந்தார்கள்.

அதன் பிறகு அவர்கள் அந்த முதிய தம்பதிகளை ஒரு கயிறு போட்டு கட்டிவிட்டார்கள். பின்னர் அவர்கள் அந்த வீட்டிலிருந்த வேலைக்காரரையும் தாக்கி ஒரு தூணில் கட்டி விட்டார்கள்.

பின்னர் அவர்கள் அந்த வீட்டின் பீரோவிலிருந்த 4 லட்சம் பெறுமான நகைகள் மற்றும் 25000 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை திருடிக்கொண்டு சென்று விட்டார்கள். பின்னர் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை காப்பாற்றினார்கள்.

அதன் பிறகு இந்த கொள்ளை சம்பவம் பற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் பற்றி போலீசார் அந்த பகுதியிலிருக்கும் சிசிடிவி கேமெரா காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை தேடி வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories