தேசிய புகைப்படம் மற்றும் காணொளி பயிலரங்கம் நாளை துவக்கம்

Published:

புது தில்லி; தேசிய புகைப்படம் மற்றும் காணொளி (வீடியோ) ஒருநாள் பயிலரங்கு நாளை நடைபெறவுள்ளது. மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகம் முதன் முதலில் நடத்தும் இந்த பயிலரங்கு புது தில்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் நடைபெறும். மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் கர்னல். ராஜ்யவர்தன் ரத்தோர் இதனை துவக்கிவைப்பார். ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், மூன்றாவது தேசிய புகைப்பட விருதுகளில் வாழ்நாள் சாதனை விருது பெற்ற புகைப்பட கலைஞர் திரு. ராஜேஷ் பேடி உள்ளிட்ட பல வல்லுனர்கள் இந்த பயிலரங்கில் பயிற்சி அளிக்க உள்ளனர். புகைப்பட பிரிவு, பொதிகை உட்பட 25 மத்திய அரசு நிறுவனங்களின் அலுவலர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். புகைப்படம் பயிலரங்கில் 100 அலுவலர்களும் காணொளி பயிலரங்கில் ­40 பேர் பயிற்சி பெறுவார். இந்த துறைகளில் உள்ள நவீன தொழில்நுட்பம், அதன் பயன்பாட்டு முறை, துறை வரலாறு போன்றவை குறித்த கருத்தரங்குகள் நடைபெறும்.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img