புதுதில்லி: நான்காவது தேசிய புகைப்பட விருதுகள் நாளை மறுநாள் அதாவது மார்ச் 20, 2015 புது தில்லியில் வழங்கப்படவுள்ளது. இந்த விருதுகளை மத்திய நிதி, நிறுவனங்கள் விவகாரம் மற்றும் தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் அருண் ஜெட்லி வழங்குவார். விருது வழங்கும் நிகழ்ச்சி புது தில்லியில் உள்ள மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகத்தின் தேசிய ஊடக மையத்தில் நடைபெறும். புகைப்பட துறையில் உள்ள சிறந்த திறமையாளர்களை கௌரவிக்கும் நோக்கத்தோடு இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த விருதுகள் மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகிறது. “ஆண்டின் சிறந்த புகைப்படக் கலைஞர்” விருது மற்றும் புகைப்பட கலை வல்லுனர்கள், பொழுதுபோக்கு புகைப்பட கலைஞர்கள் என இரு பிரிவுகளிலும் “சிறப்பு குறிப்பு விருது” வழங்கப்படும். இதைத்தவிர தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் புகைப்பட துறைகளில் பல சாதனைகளை பெற்றதற்காக வாழ்நாள் சாதனை விருதையும் இந்த அமைச்சகம் வழங்குகிறது. புகைப்பட கலை வல்லுனர்களுக்கு “எனது பாரதம் தூய்மையான பாரதம்” என்ற தலைப்பும் பொழுதுபோக்கு புகைப்பட கலைஞர்களுக்கு “தாயும்சேயும்” என்ற தலைப்பும் வழங்கப்பட்டுள்ளது. ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட நடுவர் குழு விருதுக்கான வெற்றியாளரை தேர்ந்தெடுக்கும். தேசிய புகைப்பட விருதுகள் 2010 ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த விழா முதன்முதலில் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் புகைப்படப் பிரிவின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியோடு சேர்த்து கொண்டாடப்பட்டது. புகைப்படப் பிரிவு நாட்டின் மிகப்பெரிய புகைப்பட தயாரிப்பு மற்றும் ஆவணங்களை பிரிவுகளில் ஒன்றாகும்.
நான்காவது தேசிய புகைப்பட விருதுகள்: அருண் ஜேட்லி வழங்குகிறார்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

