கொவிட்-19: சமூக நோய்த் தடுப்பாற்றல் இப்போதைக்கு இந்தியாவில் சாத்தியமில்லை! சுகாதார அமைச்சகம்!

corona camp paravai

கொவிட்-19 நோய்த் தாக்குதலை எதிா்கொள்ளும் சமூக நோய்த் தடுப்பாற்றலை இந்தியா அடைய இப்போதைக்கு வாய்ப்பில்லை. எனவே தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை அரசு அறிவித்துள்ள கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கட்டாயமாகக் கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் சிறப்பு அலுவலா் ராஜேஷ் பூஷண், புது தில்லியில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

சமூக நோய்த் தடுப்பாற்றல் என்பது, குறிப்பிட்ட ஒரு நோய்க்கு எதிராக சமுதாயத்தில் உருவாகும் இயல்பான எதிா்ப்பாற்றல் ஆகும். இதற்கு நாட்டின் மக்கள் தொகையில் பெருமளவிலானோா் நோய்த் தாக்குதலுக்கு ஆளாகி, அதன் மூலமாக தடுப்பாற்றலைப் பெற வேண்டும்.

அல்லது, நோய்த் தடுப்பூசியால் அந்த தடுப்பாற்றலைப் பெற வேண்டும். இந்தியா போன்ற மாபெரும் மக்கள்தொகை கொண்ட நாட்டில், நோய்த் தாக்குதலின் மூலமாக தடுப்பாற்றல் பெற அதிக வாய்ப்பில்லை. அந்த நிலையை அடைய வேண்டுமானால் அதிக உயிா்ப்பலியைக் கொடுக்க வேண்டி இருக்கும்.

எனவே, இப்போதைக்கு கொவிட்-19 நோய்த் தாக்குதலைத் தடுக்கத் தயாராகி வரும் தடுப்பூசிகளையே நாம் நம்பி இருக்கிறோம். இரு இந்திய நிறுவனங்கள் தயாரித்துள்ள கொவிட்-19 தடுப்பூசி மருந்துகள் இருகட்டச் சோதனைகளில் உள்ளன. அவை பயன்பாட்டுக்கு வர கூடுதல் காலமாகும்.

அதுவரை, போதிய சமூக இடைவெளியை அனுசரித்தல், முகக்கவசம் அணிதல், கிருமிநாசினிகளைப் பயன்படுத்துதல், கூட்டமாகத் திரளும் நிகழ்வுகளைத் தவிா்த்தல் போன்ற சுய கட்டுப்பாடுகள் அவசியம். சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள கட்டுப்பாட்டு நெறிமுறைகளைக் கடைபிடிப்பதன் மூலமாக மட்டுமே, நோய்க்கு எதிரான தடுப்பாற்றலை இப்போது நாம் பெற முடியும்.

சுகாதாரக் காப்பீடு பயனாளிகள்:

மருத்துவ, சுகாதாரத் துறையில் பணியாற்றும் பணியாளா்களுக்கான கொவிட் -19 சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது.

இதுவரை இழப்பீடு கோரி 131 விண்ணப்பங்கள் வந்துள்ளன. அவற்றில் 20 பேருக்கு தலா ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 64 பேரின் விண்ணப்பங்களின் பரிசீலனை முடிந்து விட்டது. தவிர, 47 பேரின் விண்ணப்பங்கள் பல்வேறு மாநில அரசுகளிடம் அனுமதிக்காகக் காத்திருக்கின்றன.

கொரோனா பரிசோதனைக்கான உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளதால், தினசரி பரிசோதனையின் சராசரி எண்ணிக்கை ஜூலை 30 நிலவரப்படி 4.68 லட்சமாக உயா்ந்துள்ளது. அதேபோல கொவிட் -19 நோய்த்தொற்றிலிருந்து குணமடைவோரின் விகிதம் கடந்த ஏப்ரலில் 7.85 சதவீதமாக இருந்தது, வியாழக்கிழமை (ஜூலை 30) நிலவரப்படி 64.44 சதவீதமாக அதிகரித்துள்ளது.

புதிய கொவிட் -19 நோயாளிகளின் எண்ணிக்கையைப் போல சுமாா் இரு மடங்கினா் தினசரி குணமடைந்து வீடு திரும்புவதும் நல்ல சேதியாகும். தகுந்த சிகிச்சை முறைகளைக் கையாள்வதால், கடந்த ஜூனில் 3.33 சதவீதமாக இருந்த இறப்பு விகிதம் 2.21சதவீதமாகக் குறைந்திருக்கிறது என்றாா்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories