புது தில்லி: தேர்தல் செலவைத் தாக்கல் செய்யாத ஆம் ஆத்மி கட்சி உள்பட 6 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் இறுதி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவ்வாறு செய்யாவிடில் கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி, அருணாச்சல் மக்கள் கட்சி, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்.), கேரள காங்கிரஸ் (எம்), மணிப்பூர் தேசிய மக்கள் கட்சி, அரியானா ஜன்ஹித் காங்கிரஸ்(பி.எல்.) ஆகிய 6 கட்சிகளும் தங்களுடைய தேர்தல் செலவுக் கணக்கை தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் இன்னும் தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில் தலைமைத் தேர்தல் ஆணையம், இந்த 6 கட்சிகளுக்கும் தேர்தல் செலவுக் கணக்கை தாக்கல் செய்யும்படியும் அடுத்த 20 நாட்களுக்குள் தாக்கல் செய்யவில்லை என்றால் கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை செய்துள்ளது.
அங்கீகாரம் ரத்தாகும் என ஆம் ஆத்மி உள்பட 6 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை நோட்டீஸ்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

