வரும் இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் பதவிக்கு முன்னாள் அதிபர் ராஜபட்ச போட்டியிடப் போவதாக செய்திகள் வெளியான நிலையில், இலங்கை தொழிலாளர் கட்சியின் சின்னத்தை மாற்றித் தருமாறு கட்சியின் தலைவர் எஸ்.எஸ்.பீ.லியனகே தேர்தல் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அவரின் இந்தக் கோரிக்கை, முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபட்சவுக்காக முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. தற்போது இலங்கைத் தொழிலாளர் கட்சியின் சின்னம் கங்காரு. அக்கட்சியின் தலைவர் எஸ்.எஸ்.பீ.லியனகே கட்சி சின்னத்தை மாற்றித் தருமாறு கோரி தேர்தல் ஆணையர் மகிந்த தேசப்பிரியவை சந்தித்தார். அப்போது, மயில் அல்லது புறா சின்னத்தை தற்போது பயன்படுத்திக் கொள்ள முடியும் என தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். இருப்பினும், கட்சியின் சின்னத்தை மாற்றிக்கொள்ள தேர்தல் அறிவிக்கப்பட்டு ஒரு வார கால அவகாசம் தேவைப்படும் என தேர்தல் ஆணையர் அக்கட்சித் தலைவரிடம் தெரிவித்துள்ளார்.
ராஜபட்சவுக்காக தொழிலாளர் கட்சி சின்னத்தை மாற்றக் கோரிக்கை!
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

