டுனீஷியா அருங்காட்சியகத் தாக்குதல்: பிரணாப் முகர்ஜி கண்டனம்

Published:

புது தில்லி: டுனீஷியாவின் பர்டோ அருங்காட்சியகத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இது போன்ற மனிதத் தன்மையற்ற செயல்களை உலக சமூகம் அனைத்தும் ஒன்று இனைந்து எதிர்க்க வேண்டும். இந்த தீவிரவாத நடவடிக்கையை எதிர்த்து நிற்கும் டுனீஷியா நாட்டுக்கும் மக்களுக்கும் இந்தியா எப்போதும் துணை நிற்கும் என்று குடியரசுத் தலைவர் கூறியுள்ளார். மேலும், இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய தனது பிரார்த்தனைகளைத் தெரிவித்தும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி செய்தி வெளியிட்டுள்ளார்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img