மத்திய அமைச்சரவையில் 9 பேர் புதிதாக பதவியேற்பு! 4 பேர் காபினட் அமைச்சர்களாக உயர்வு!

புது தில்லி:
மத்திய அமைச்சரவையில் 9 பேர் புதிதாக இன்று பொறுப்பேற்றுக் கொண்டனர். நிர்மலா சீதாராமன் உள்பட நன்றாக செயல்பட்ட 4 பேர் காபினட் அந்தஸ்து அமைச்சர்களாக உயர்வு பெற்றனர்.

அமைச்சர்களின் செயல்பாட்டை உன்னிப்பாக கவனித்து வந்த மோடி, திருப்திகரமாக செயல்படாதவர்களை நீக்கிவிட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க தீர்மானித்தார். அதன்படி மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவையில் மாற்றம் செய்ய வசதியாக ராஜீவ் பிரதாப் ரூடி (திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர்– தனி பொறுப்பு), பக்கன் சிங் குலாஸ்டே (சுகாதாரம், குடும்பநலம்), சஞ்சீவ் குமார் பல்யான் (நீர்வளம்), பண்டாரு தத்தாத்ரேயா (தொழிலாளர் நலம்–தனி பொறுப்பு), மகேந்திரநாத் பாண்டே (மனிதவள மேம்பாடு), சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை மந்திரி கல்ராஜ் மிஸ்ரா ஆகியோர் தங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர்.

இந்நிலையில், பிரதமர் மோடி பாஜக.,வைச் சேர்ந்த 9 பேரை தனது அமைச்சரவையில் இணைத்துக் கொண்டார்.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

அஸ்வினி குமார் சவுபே (பீகார்), வீரேந்திர குமார் (மத்திய பிரதேசம்), சிவ் பிரதாப் சுக்லா (உத்தரபிரதேசம்), அனந்த் குமார் ஹெக்டே (கர்நாடகா), ராஜ்குமார் சிங், ஹர்தீப் புரி (முன்னாள் வெளியுறவு அதிகாரி), கஜேந்திர சிங் செகாவத், சத்யபால் சிங் (மும்பை முன்னாள் போலீஸ் கமி‌ஷனர்), அல்போன்ஸ் கன்னன்தானம் (முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி) ஆகியோர் புதிய அமைச்சர்களாக இணைத்துக் கொள்ளப் பட்டனர்.

இன்று காலை குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

ஏற்கெனவே அமைச்சர்களாக இருந்த முக்தார் அப்பாஸ் நக்வி, பியூஸ் கோயல், நிர்மலா சீதாராமன், தர்மேந்திர பிரதான் ஆகியோர், சிறப்பாக செயல்பட்ட அமைச்சர்கள் என்று, அவர்கள் கேபினட் அமைச்சர்களாக உயர்த்தப்பட்டனர். அவர்கள் நால்வரும் காபினட் அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர். யாருக்கு எந்த துறை என்பது பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

விழாவில் பிரதமர் மோடி, பாஜக., தலைவர் அமித்ஷா, எம்.பி.க்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கூட்டணிக் கட்சிகளான சிவசேனா, ஐஜத., உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப் படவில்லை. கூட்டணிக் கட்சிகளை அடங்கிய மேலும் ஒரு அமைச்சரவை மாற்றம் விரைவில் நடக்கும் என்று தகவல்கள் வெளியாகின.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories