December 6, 2025, 7:55 AM
23.8 C
Chennai

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்!

07 Sep05 Pranab Mukherjee
07 Sep05 Pranab Mukherjee

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தமது 84 ஆவது வயதில் காலமானார்!

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், இந்திய அரசியலில் மூத்த தலைவருமான பிரணாப் முகர்ஜி திங்கள்கிழமை (ஆகஸ்ட் 31)  இன்று காலமானார். அவருக்கு வயது 84. இந்த தகவலை அவரது மகன் அபிஜித் முகர்ஜி அறிவித்தார்.

இந்திய அரசியலின்  மூத்த தலைவராகத் திகழ்ந்த பிரணாப் முகர்ஜி அண்மையில் உடல்நல குறைவு காரணமாக சிகிச்சைக்காக இராணுவ மருத்துவ மனைக்குச் சென்றபோது கொரோனா வைரஸ் பாசிட்டிவ் இருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவமனையில், மூளையில் ரத்தம் உறைதலுக்காக அறுவை சிகிச்சை  மேற்கொள்ளப்பட்டது.

 அறுவை சிகிச்சை நடந்து முடிந்த ஓரிரு நாளில் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது இந்நிலையில் வென்டிலேட்டர்  உதவியுடன் அவரை சிகிச்சையில் வைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. அவரது மகன் அபிஜித் முகர்ஜி தனது தந்தையின் உடல்நிலை நிலையாக உள்ளது என்று ட்வீட் செய்தார். இருப்பினும், அனைவரையும் தொடர்ந்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொண்டார்.

பிரணாப் டாவின் அரசியல் வாழ்க்கை  50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்துள்ளது  அவர் இந்திய  நாட்டின் குடியரசு தலைவராக  உயர்ந்த   நிலைக்கு வந்தவர் அவர் 2012 முதல் 2017 வரை   குடியரசு தலைவர் மாளிகையில்   இருந்தார். 

2009 மற்றும் 2012 க்கு இடையில் அவர் நிதி அமைச்சராகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் (2004-2006), வெளியுறவுத்  அமைச்சராகவும் (2006-2009) இருந்தார். 

பிரணாப் முகர்ஜிக்கு மூன்று வாரிசுகள். ஷர்மிஸ்தா முகர்ஜி, அபிஜித் முகர்ஜி மற்றும் இந்திரஜித் முகர்ஜி ஆகியோர்.  பிரணாப் முகர்ஜி ஒரு தீவிர காங்கிரஸ்காரர். ஆனால் நாட்டின் நலன் என்று வந்தபோது அவர் கட்சி பேதங்களை கடந்து வழிகாட்டி இருக்கிறார் மத்தியில் காங்கிரஸை அடுத்து தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற போது அவருக்கு அனைத்து வகையிலும் வழிகாட்டினார் பிரணாப்முகர்ஜி

இதற்காக, பிரதமர் நரேந்திர மோடி தாம் பிரதமர் பதவியில் அமர்ந்த பின்னர் அவரிடமிருந்து பெற்ற வழிகாட்டுதலுக்கு பலமுறை நன்றி தெரிவித்துள்ளார்.

பிரணாப் முகர்ஜிக்கு 2008 ல் பத்ம விபூஷன் மற்றும் 2019 ல் பாரத் ரத்னா வழங்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories