ஆந்திர தலைநகர் அமராவதியில் அம்பேத்கர் சிலைகள் காணாமல் போனதால் பரபரப்பு!

Published:

amaravathi-ambedkar-statues-missing
amaravathi-ambedkar-statues-missing

அம்பேத்கர் நினைவு வனத்தில் நான்கு அம்பேத்கர் சிலைகள் காணாமல் போனது துரதிருஷ்டவசமானது என்று முன்னாள் அமைச்சர் நக்கா ஆனந்த் பாபு விமர்சித்தார்.

அம்பேத்கரின் சிறப்பை உலகிற்கு தெரியச் செய்வதற்காக தெலுங்கு தேசம் கட்சி அரசு ரூபாய் 136 கோடிக்கான ப்ராஜெக்ட் வேலைகளை ஆரம்பித்தது.

ஸ்மிருதிவனம் பிராஜெக்ட் அமைப்பதன் விஷயத்தில் தற்போதைய அரசாங்கம் ஆரம்பத்திலிருந்து சதித் திட்டத்தோடு நடந்துகொள்கிறது. சிலைகள் காணாமல் போனதன் பின்னால் யார் உள்ளரோ அரசாங்கம் உடனே கண்டு பிடிக்க வேண்டும். சிலைத் திருடர்களை பிடிக்காமல் இருப்பதால் அரசாங்கத்தின் மேல் சந்தேகம் விழுகிறது.

அம்பேத்கரை அவமதிப்பது போல் தலித் மக்களின் மீது தாக்குதல்களும் அவமதிப்புகளும் செய்துவருகிறார்கள். ஆதலால் ஆட்சியாளர்களை குற்றம்சாட்ட வேண்டி வருகிறது.

தலைநகரில் உள்ள சிலைகளை மாயம் செய்வது சாமானியர்களால் ஆகக்கூடிய செயல் அல்ல. ஸ்வராஜ் மைதானத்தில் அம்பேத்கர் சிலை நிறுவங்கள்…. நிறுவாமல் போங்கள்! அது பற்றிய கவலை இல்லை.

ALSO READ:  2036 ஒலிம்பிக் போட்டிக்கு குழந்தைகளை இப்போதே தயார் படுத்துவோம்: பிரதமர் மோடி!

ஸ்மிருதிவனம் பணிகளை நிறுத்துவதை மட்டும் பொறுக்க மாட்டோம் என்று நக்கா ஆனந்தபாபு எச்சரித்தார்.

ஸ்மிருதி வனத்தில் தலைநகர் விவசாயிகளும் தலித் மகிளா சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img