அலுவலக உதவியாளர் வேலைக்கு வரிசையில் நின்ற பாஜக எம்.எல்.ஏ. மகன்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஆளும் பாஜக எம்.எல்.ஏ.வின் மகன், அலுவலக உதவியாளர் வேலைக்கான நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள மற்றவர்களுடன் வரிசையில் நின்று பங்கேற்றார். இந்த நிகழ்வு அந்தப் பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானில் நிவாய் தொகுதி எம்எல்ஏ., ஹீரா லால் வர்மா தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர். இவருடைய மகன் ஹன்ஸ்ராஜ் 8 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். ராஜஸ்தான் மாநில விவசாயத் துறையில் அலுவலக உதவியாளர் வேலை காலியாக இருப்பதை பத்திரிகை வாயிலாக அறிந்தார். தன் மகன் ஹன்ஸ்ராஜை, அந்த வேலைக்கு விண்ணப்பிக்குமாறு எம்எல்ஏ வர்மா அனுப்பி வைத்துள்ளார். அவரும், அஜ்மீரில் உள்ள விவசாயத்துறை அலுவலகத்தில் வேலைக்கான நேர்காணலில் பங்கேற்க மற்றவர்களுடன் வரிசையில் நின்றார். இது குறித்து வர்மா கூறியது… எனது மகன் குறைந்த படிப்பே முடித்துள்ளான். பத்தாம் வகுப்புகூட தாண்டவில்லை. எனவே அவனுக்கு அலுவலக உதவியாளர் வேலைதான் சரியாக இருக்கும். அவன் அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை. இப்போது எனது மகன், ஒரு கிளினிக்கில் வேலை பார்த்து வருகிறான். மாதம் ரூ 5 ஆயிரம் சம்பளமாகக் கிடைக்கிறது. என் முடிவு குறித்து சில எம்எல்ஏக்கள் என்னிடம் கேள்வி கேட்கிறார்கள். இது வழக்கத்துக்கு மாறான ஒரு செயல்தான். ஆனால், இதில் ஒன்றும் தவறு இல்லையே என நான் அவர்களிடம் கூறிவிட்டேன். இப்படி நடந்து கொள்வது, நேர்மையாக வாழ வழியைக் காட்டும். தவறான வழியில் சம்பாதித்து வசதியாக வாழ்வதற்கு, எனது பிள்ளைகளை நான் ஊக்கப்படுத்த மாட்டேன். நேர்முகத் தேர்வை எனது மகன் சிறப்பாக எதிர்கொண்டுள்ளான். தகுதி அடிப்படையில் மட்டுமே அவனுக்கு அந்த வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. நான் 3 பாடங்களில் முதுகலைப் பட்டம் பெற்று தங்கப் பதக்கம் பெற்றுள்ளேன். சமூக நலத்துறை துணை இயக்குனராகப் பணியாற்றியுள்ளேன். இரண்டாவது முறையாக எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். மக்களுக்கு என்னால் இயன்ற வரையில் நேர்மையாக பணியாற்றுவேன்… என்று கூறுகிறார் வர்மா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories