அலுவலக உதவியாளர் வேலைக்கு வரிசையில் நின்ற பாஜக எம்.எல்.ஏ. மகன்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஆளும் பாஜக எம்.எல்.ஏ.வின் மகன், அலுவலக உதவியாளர் வேலைக்கான நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள மற்றவர்களுடன் வரிசையில் நின்று பங்கேற்றார். இந்த நிகழ்வு அந்தப் பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானில் நிவாய் தொகுதி எம்எல்ஏ., ஹீரா லால் வர்மா தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர். இவருடைய மகன் ஹன்ஸ்ராஜ் 8 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். ராஜஸ்தான் மாநில விவசாயத் துறையில் அலுவலக உதவியாளர் வேலை காலியாக இருப்பதை பத்திரிகை வாயிலாக அறிந்தார். தன் மகன் ஹன்ஸ்ராஜை, அந்த வேலைக்கு விண்ணப்பிக்குமாறு எம்எல்ஏ வர்மா அனுப்பி வைத்துள்ளார். அவரும், அஜ்மீரில் உள்ள விவசாயத்துறை அலுவலகத்தில் வேலைக்கான நேர்காணலில் பங்கேற்க மற்றவர்களுடன் வரிசையில் நின்றார். இது குறித்து வர்மா கூறியது… எனது மகன் குறைந்த படிப்பே முடித்துள்ளான். பத்தாம் வகுப்புகூட தாண்டவில்லை. எனவே அவனுக்கு அலுவலக உதவியாளர் வேலைதான் சரியாக இருக்கும். அவன் அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை. இப்போது எனது மகன், ஒரு கிளினிக்கில் வேலை பார்த்து வருகிறான். மாதம் ரூ 5 ஆயிரம் சம்பளமாகக் கிடைக்கிறது. என் முடிவு குறித்து சில எம்எல்ஏக்கள் என்னிடம் கேள்வி கேட்கிறார்கள். இது வழக்கத்துக்கு மாறான ஒரு செயல்தான். ஆனால், இதில் ஒன்றும் தவறு இல்லையே என நான் அவர்களிடம் கூறிவிட்டேன். இப்படி நடந்து கொள்வது, நேர்மையாக வாழ வழியைக் காட்டும். தவறான வழியில் சம்பாதித்து வசதியாக வாழ்வதற்கு, எனது பிள்ளைகளை நான் ஊக்கப்படுத்த மாட்டேன். நேர்முகத் தேர்வை எனது மகன் சிறப்பாக எதிர்கொண்டுள்ளான். தகுதி அடிப்படையில் மட்டுமே அவனுக்கு அந்த வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. நான் 3 பாடங்களில் முதுகலைப் பட்டம் பெற்று தங்கப் பதக்கம் பெற்றுள்ளேன். சமூக நலத்துறை துணை இயக்குனராகப் பணியாற்றியுள்ளேன். இரண்டாவது முறையாக எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். மக்களுக்கு என்னால் இயன்ற வரையில் நேர்மையாக பணியாற்றுவேன்… என்று கூறுகிறார் வர்மா.

ALSO READ:  யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

Topics

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories