ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஆளும் பாஜக எம்.எல்.ஏ.வின் மகன், அலுவலக உதவியாளர் வேலைக்கான நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள மற்றவர்களுடன் வரிசையில் நின்று பங்கேற்றார். இந்த நிகழ்வு அந்தப் பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானில் நிவாய் தொகுதி எம்எல்ஏ., ஹீரா லால் வர்மா தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர். இவருடைய மகன் ஹன்ஸ்ராஜ் 8 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். ராஜஸ்தான் மாநில விவசாயத் துறையில் அலுவலக உதவியாளர் வேலை காலியாக இருப்பதை பத்திரிகை வாயிலாக அறிந்தார். தன் மகன் ஹன்ஸ்ராஜை, அந்த வேலைக்கு விண்ணப்பிக்குமாறு எம்எல்ஏ வர்மா அனுப்பி வைத்துள்ளார். அவரும், அஜ்மீரில் உள்ள விவசாயத்துறை அலுவலகத்தில் வேலைக்கான நேர்காணலில் பங்கேற்க மற்றவர்களுடன் வரிசையில் நின்றார். இது குறித்து வர்மா கூறியது… எனது மகன் குறைந்த படிப்பே முடித்துள்ளான். பத்தாம் வகுப்புகூட தாண்டவில்லை. எனவே அவனுக்கு அலுவலக உதவியாளர் வேலைதான் சரியாக இருக்கும். அவன் அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை. இப்போது எனது மகன், ஒரு கிளினிக்கில் வேலை பார்த்து வருகிறான். மாதம் ரூ 5 ஆயிரம் சம்பளமாகக் கிடைக்கிறது. என் முடிவு குறித்து சில எம்எல்ஏக்கள் என்னிடம் கேள்வி கேட்கிறார்கள். இது வழக்கத்துக்கு மாறான ஒரு செயல்தான். ஆனால், இதில் ஒன்றும் தவறு இல்லையே என நான் அவர்களிடம் கூறிவிட்டேன். இப்படி நடந்து கொள்வது, நேர்மையாக வாழ வழியைக் காட்டும். தவறான வழியில் சம்பாதித்து வசதியாக வாழ்வதற்கு, எனது பிள்ளைகளை நான் ஊக்கப்படுத்த மாட்டேன். நேர்முகத் தேர்வை எனது மகன் சிறப்பாக எதிர்கொண்டுள்ளான். தகுதி அடிப்படையில் மட்டுமே அவனுக்கு அந்த வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. நான் 3 பாடங்களில் முதுகலைப் பட்டம் பெற்று தங்கப் பதக்கம் பெற்றுள்ளேன். சமூக நலத்துறை துணை இயக்குனராகப் பணியாற்றியுள்ளேன். இரண்டாவது முறையாக எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். மக்களுக்கு என்னால் இயன்ற வரையில் நேர்மையாக பணியாற்றுவேன்… என்று கூறுகிறார் வர்மா.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
மதுரை
மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!
இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
நெல்லை
நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!
பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது
சற்றுமுன்
ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!
இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
மதுரை
மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!
இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
நெல்லை
நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!
பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது
சற்றுமுன்
ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!
இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.
சற்றுமுன்
10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?
தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
கட்டுரைகள்
பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?
பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.
சற்றுமுன்
மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:
மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...
Entertainment News
Previous article

