ஷாக் அடித்து மரணத்தின் வாயிலுக்கு சென்ற சிறுவன்! 36 மணி நேரம் கழித்து மீண்ட உயிர்!

shock

மின்கம்பி அறுந்து விழுந்ததால் மூச்சற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் 36 மணிநேரத்திற்குப் பிறகு உயிர்பெற்றுள்ளான்.

தில்லி பழைய குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு கடையில் ஆகஸ்ட் 1ஆம் தேதி பலத்த மழை காரணமாக மின்கம்பி அறுந்து ஒரு 16 வயது சிறுவன்மீது விழுந்தது. அதீத மின்சாரம் தாக்கியதால் மூச்சற்ற நிலையில், இந்திரபிரஸ்தா மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டான்.

சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவனது உடலில் மின்சாரம் ஓடிக்கொண்டிருப்பதாகக் கூறியிருக்கின்றனர். அதனால் ரத்த அழுத்தம் குறைந்து, இதயத்துடிப்பு நின்றுபோனதையும் கண்டறிந்துள்ளனர். இதனால் சிறுவனுக்கு மாரடைப்பும் ஏற்பட்டிருக்கிறது.

இதுபற்றி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவு தலைமை மருத்துவர் பிரியதர்ஷினி பால் கூறுகையில், ”சிறுவனின் மோசமான நிலையை பார்த்தவுடனே சிபிஆர் சிகிச்சை கொடுத்தோம். இல்லாவிட்டால் மூளை பாதிப்படைந்துவிடும்.

சிறுவனுக்கு 45 முறை பிசிஆர் சிகிச்சை கொடுத்தோம். சரியான நேரத்தில் கொடுத்த சிகிச்சையால் சுமார் 36 மணிநேரம் கழித்து சிறுவனுக்கு சுயநினைவு திரும்ப வந்தது. ஆக்ஸ்ட் 5ஆம் தேதி சிறுவன் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டான்” என்கிறார்.

சரியான நேரத்தில் சிபிஆர் சிகிச்சை கொடுக்கப்படாவிட்டால் உடலில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு மூளை பாதிப்பு ஏற்படும். சில நேரங்களில் சுயநினைவு திரும்பினாலும், உடல் நடுக்கம், பக்கவாதம், ஞாபக மறதி, பதிலளித்தல் போன்ற செயல்களில் பாதிப்பு ஏற்படும். ஆனால் இந்த சிறுவன் அதிர்ஷ்டவசமாக காப்பாற்றப்பட்டுள்ளான் என்கிறார் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் சுதீர் தியாகி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories