கைது செய்தாங்க… உடனே ஜாமீன்ல விட்டுட்டாங்க..! அதான் விஜய் மல்லையா!

இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கடன் வாங்கிவிட்டு, அவற்றை திருப்பிச் செலுத்தாமல் இழுத்தடித்து, லண்டனுக்கு தப்பிச் சென்றுவிட்ட கிங் பிஷர் நிறுவனத்தின் தலைவர் விஜய் மல்லையா மீது, இந்தியாவில் சட்ட விரோத பணப் பரிவர்த்தனைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குக்காக அவரைக் கைது செய்ய இந்திய தரப்பில் முயற்சிகள் மேற்கொண்டுள்ள நிலையில், விஜய் மல்லையாவை (61) இங்கிலாந்து அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். எனினும், நீதிமன்றம் ஜாமீன் அளித்தததால், அவர் உடனடியாக விடுவிக்கப்பட்டார்.

விஜய் மல்லையா உள்ளிட்டோர் மீது சிபிஐ., அமலாக்கத் துறை என வெவ்வேறு அமைப்புகள், தனித்தனியே வழக்குகளைப் பதிவு செய்துள்ளன. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தியாவில் மல்லையாவுக்கு எதிரான வழக்கு விசாரணை தீவிரமடைந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் நாட்டை விட்டு தப்பிச் சென்று, லண்டனில் தஞ்சம் புகுந்தார் மல்லையா.

ALSO READ:  சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

இதை அடுத்து, தங்களின் விசாரணைக்காக லண்டனில் இருக்கும் மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வர சிபிஐ., அமலாக்கத் துறை ஆகியவை முயற்சி மேற்கொண்டுள்ளன. இந் நிலையில், பிரிட்டன் அரசிடம் மல்லையாவை திருப்பி அனுப்பக் கோரி, நாடு கடத்துதல் தொடர்பான ஒப்பந்தத்தின் கீழ் இந்திய அரசு வேண்டுகோளை முன் வைத்தது. இந்த வேண்டுகோளை ஏற்று, பிரிட்டனின் ஸ்காட்லாந்து யார்டு போலீஸார், விஜய் மல்லையாவை கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்தனர். ஆனால், உடனேயே வெஸ்ட்மின்ஸ்டர் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி மல்லையாவுக்கு ஜாமீன் அளித்தார்.

இத்தகைய சூழ்நிலையில், மீண்டும் சட்ட விரோத பணப் பரிவர்த்தனைச் சட்டத்தின் கீழ் மல்லையாவுக்கு எதிராக அமலாக்கத் துறை ஒரு வழக்கு பதிவு செய்து அது குறித்த தகவலை பகிர்ந்தது. இந்த வழக்கில், விஜய் மல்லையாவை லண்டனில் வைத்து அந்நாட்டு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை நேற்று கைது செய்தனர். முன்னர் நடந்தது போலவே, வெஸ்ட்மின்ஸ்டர் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி, சில நிபந்தனைகளை விதித்து, மல்லையாவுக்கு ஜாமீன் அளித்து உத்தரவிட்டார்.

இந்தத் தகவல் வெளியானதும், ஜாமீன் பெறுவதற்காகவே மல்லையாவைக் கைது செய்கிறார்கள் போலும் என்று நெட்டிசன்கள் கருத்து மழை பொழிந்து வருகின்றனர்.

ALSO READ:  தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

Topics

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories