December 6, 2025, 8:33 AM
23.8 C
Chennai

கொரோனா கொடூர பரவலுக்கு தப்ளிக் ஜமாஅத் காரணம்: உறுதிப் படுத்திய உள்துறை அமைச்சகம் !

tabliqi-jamaat-markaz-delhi
tabliqi-jamaat-markaz-delhi

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு தில்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிகி ஜமாஅத் மாநாட்டில் பலரும் பங்கேற்றதே காரணம் என மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சகம் உறுதிபடத் தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் பேசிய மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி, மார்ச் மாதம் தில்லியின் நிஜாமுதீனில் நடைபெற்ற தப்லிகி ஜமாஅத் கூட்டம் கொரோனா வைரஸ் தொற்று “பல நபர்களுக்கு” ​​பரவ வழிவகுத்தது என்று கூறியுள்ளார்.
 
கொரோனா வெளிநாடுகளில் வேகமாகப் பரவத் தொடங்கிய நாட்களில் தில்லி நிஜாமுதீனில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தப்லிகி ஜமாஅத் மாநாட்டில் பங்கேற்க, 35 நாடுகளில் இருந்து, ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் தில்லிக்கு வந்தனர்.

அதில் பலருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதை அடுத்து பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இவர்களில் பலர் விசா விதிமுறை மீறலில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விசா விதிமுறை மீறலில் ஈடுபட்ட 2,765 பேர் மீது 11 மாநிலங்களில் 205 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இன்று மாநிலங்களவையில் தப்லிகி ஜமாஅத் குறித்த கேள்விக்கு பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, எழுத்து பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்திருப்பதாவது….

தில்லி தப்லிகி ஜமாஅத் மாநாட்டில் கொரோனா விதிமுறைகளை மீறி கூடியிருந்த 236 பேரை போலீசார் கைது செய்தனர். 2,361 பேர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.

தில்லி அரசு விதித்திருந்த கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாடுகளை மீறி சமூக விலகலைக் கடைபிடிக்காமல், சானிடைசர் இல்லாமல், மாஸ்க் அணியாமல் ஒன்றாகப் பலர் கூடியிருந்தார்கள். தப்லிகி ஜமாஅத்தின் தலைவர் மௌலானா சாத் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. நாட்டில் கொரோனா வைரஸ் பரவலுக்கு, தப்லிகி ஜமாஅத் மாநாடும் ஒரு காரணம்… என்று கூறியிருக்கிறார்.

தில்லி மற்றும் பிற மாநிலங்களில் கொரோனா பரவுவதற்கு ஒரு முக்கியக் காரணம் தப்லிகி ஜமாஅத், மக்களைச் சேர்த்ததுதான்” என்று ஒரு கேள்விக்கு பதிலளித்த ரெட்டி கூறியுள்ளார்.

“தில்லி காவல்துறையினரால் அறிவிக்கப்பட்டபடி, கோவிட் காரணமாக பல்வேறு அதிகாரிகள் வழங்கிய வழிகாட்டுதல்கள் மற்றும் உத்தரவுகள் இருந்தபோதிலும் கோவிட்- 19 தொற்றுநோய், நிஜாமுதீன் மார்காஸுக்குள் ஒரு நீண்ட காலத்திற்கு கூடியிருந்த ஒரு பெரிய கூட்டத்தின் மூலம், தனிநபர் விலகல் கடைபிடிக்காமல், முககவசம் அணியாமல், சானிடிசர்கள் பயன்படுத்தாமல் இருந்தது, பல நபர்களிடையே கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கு காரணமாக அமைந்தது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
 
தில்லி காவல்துறையினர் 233 தப்லீகி ஜமாஅத் உறுப்பினர்களை கைது செய்ததாகவும், மார்ச் 29 முதல் 2,361 பேர் அமைப்பின் தலைமையகத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
 
இருப்பினும், ஜமாஅத் தலைவர் மௌலானா சாத் மீது விசாரணை நடந்து வருகிறது. தப்லிகி சேகரிப்பு தொடர்பான வழக்கு, 304/308/336/188/269/270/271 / 120-பி ஐபிசி, பிரிவு 14-பி வெளிநாட்டினர் சட்டம் 1946, பிரிவு 3 தொற்று நோய்கள் சட்டம் 1897 மற்றும் பிரிவு 51/58 பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 ஆகிய பிரிவுகளின் கீழ் தில்லி காவல்துறையால் பதியப் பெற்று நடந்துவருகிறது ”என்று அமைச்சர் மேலும் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories