திருமலை திருப்பதியில் ஜகன்மோகன் ரெட்டி!

Published:

jagan-mohan-reddy-in-tirupati
jagan-mohan-reddy-in-tirupati

திருமலை திருப்பதியில் வஸ்த்ரம் சமர்ப்பிக்கும் நிகழ்வில் கலந்து கொள்ள ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று வந்திருந்தார். அவர் கருட சேவையில் கலந்து கொள்வதற்காகவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

திருமலையில் மகா துவாரம் வழியாக ஆலயப் பிரவேசம் செய்தார் ஜெகன் மோகன். பஞ்சகச்ச வேஷ்டி கட்டும், நெற்றியில் திருநாமமும் தரித்து ஆந்திர முதல்வர் ஜெகன் ஸ்ரீவாருக்கு பட்டு வஸ்திரங்களை தலைமேல் தாங்கி எடுத்துச் சென்று சமர்ப்பித்தார்.

jagan-vijayamma-roja
jagan-vijayamma-roja

முதல்வரோடு டிடிடி சேர்மன் சுப்பாரெட்டி, கோயில் செயல் அலுவலர் மற்றும் அமைச்சர்கள் உடன் சென்றனர். எம்எல்ஏ ரோஜா உடனிருந்தார். முதலில் பேடி ஆஞ்சநேயர் ஸ்வாமி யை தரிசித்துக் கொண்டார் முதல்வர்.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img