தீக்குச்சியில் சோனுசூட் முகத்தை செதுக்கிய இளைஞர்!

Published:

sonu-sood-match-stick
sonu-sood-match-stick

நெருப்பு குச்சியின் மீது சோனூசூட் முகத்தை செதுக்கிய இளைஞர்.

பென்சிலால் படம் வரைவது வேறு. அந்த பென்சில் முனையையே அழகான வடிவமாக அமைப்பது வேறு. அது ஒரு அற்புதமான கலை. பென்சில் முனையில் கலை வடிவங்கள் செதுக்குவதவதற்கு மிகவும் பொறுமையும் திறமையும் வேண்டும்.

அப்படிப்பட்ட அற்புதமான நுண்மையான கலை வடிவத்தைச் செதுக்குவதில் தெலங்காணா ரங்காரெட்டி மாவட்டம் தாண்டூரைச் சேர்ந்த மைக்ரோ ஆர்டிஸ்ட் மதுசூதன் தேர்ச்சி பெற்றவர்.

சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மதுசூதன் மைக்ரோ ஆர்ட்டிஸ்டாக தன் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

அண்மையில் சோனூசூடால் பாராட்டப்பட்டதால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
நெருப்புக் குச்சி மீது சோனூசூட் முகத்தைச் செதுக்கி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

match-stick-sonu-sood
match-stick-sonu-sood

பென்சில் முனையிலும் நெருப்புக் குச்சி மீதும் வடிவங்கள் செதுக்குவதில் மதுசூதன் நேர்த்தி பெற்றவர். பென்ஸில் லெட் மீது அவர் செதுக்கிய விநாயகர், மோடி, சத்ரபதி சிவாஜி, புத்தர், டீ கெட்டில் போன்றவை பிரத்தியேகமாக அவரை உலகுக்கு அடையாளம் காட்டிய சிறப்பம்சங்கள்.

ALSO READ:  வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

2018 ல் எள் தானியத்தின் மீது இந்தியா மேப்பையும் அனுமான் உருவத்தையும் வரைந்து ரெக்கார்ட் படைத்தார் மதுசூதன். தற்போது ஹைதராபாத் நகரத்தில் மாசப்டாங்கில் உள்ள ஜவஹர்லால் நேரு ஆர்க்கிடெக்சர் அண்ட் ஃபைன் ஆர்ட்ஸ் இறுதியாண்டு படித்து வருகிறார். தந்தை பிர்காட் பாபு. தாய் ஆஷாபாயி. தந்தை 2016ல் மரணித்ததாக மதுசூதன் தெரிவித்தார்.

கடந்த 4 ஆண்டுகளாக 200க்கும் மேற்பட்ட கலை வடிவங்களை உருவாக்கியதாக கூறினார். 0.7 பென்சில் கார்விங் பிரிவில் பென்சில் லெட் மீது ஆங்கில எழுத்துக்களை செதுக்கிய மது, ராயல் சக்சஸ் இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இல் இடம் பிடித்துள்ளார்.

அதுமட்டுமல்ல. ஆசியா புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ், இண்டியா புக் ஆஃப் வேர்ல்ட் ரெகார்ட்ஸ் ஆகியவற்றுக்கு விண்ணப்பம் செய்துள்ளதாக குறிப்பிட்டார்.

எப்படியும் கின்னஸ் புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்ட்சில் இடம் பிடிப்பதே தன்னுடைய இலக்கு என்று அவர் கூறினார்.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img