விகாராபாத்தில் கொடூரம்! இளம்பெண்ணை பிளாஸ்டிக் கவரில் சுற்றி குழிதோண்டி புதைத்து…!

Published:

murder
murder

பெண்களின் மீது நடக்கும் வன்முறை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நாடெங்கிலும் வரிசையாக நடந்து வரும் இந்த சம்பவங்கள் கவலை அளிக்கின்றன. வீட்டிலிருந்து வெளியே செல்வது என்றாலே பயந்து நடுங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நள்ளிரவில் என்ன ஆகும் என்பதை பக்கத்தில் ஒதுக்கி வைத்தாலும்… பட்டப்பகலிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தெரிகிறது.

அண்மையில் தெலங்காணா விகாரபாத் மாவட்டத்தில் நடந்த கொடூரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. விகாராபாத் அருகிலுள்ள கோடிபல்லி பிராஜக்ட் அருகில் ஒரு இளம்பெண்ணைப் புதைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணைக் கொலை செய்த அடையாளம் தெரியாதவர்கள் கோட்டிபல்லி அணையின் கீழ் இறந்த சடலத்தை புதைத்து வைத்தார்கள். உடலை ஒரு கவரில் சுற்றி புதைத்து வைத்திருந்தார்கள் அந்த கொடூரமானவர்கள்.

மாடு மேய்ப்பவர்கள் பார்த்து போலீசாருக்கு செய்தி தெரிவித்ததால் உடலை வெளியே எடுத்து போஸ்ட்மார்ட்டத்திற்காக அனுப்பினார்கள். இறந்த பெண் யார் இங்கு ஏன் வந்தாள் கொலைக்கு காரணம் என்ன என்று பல கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

நான்கு நாட்களுக்கு முன்பே கொலை செய்து புதைத்து இருப்பதாக சந்தேகம் வெளியிட்டனர் போலீசார்

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img