அறுவை சிகிச்சை செய்தபோது சிறுமி மரணம்! டாக்டர் தற்கொலை!

Published:

doctor-suicide
doctor-suicide
  • அறுவை சிகிச்சை செய்தபோது சிறுமி மரணம். மருத்துவர் தற்கொலை.
  • கேரளாவில் உள்ள கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மருத்துவர் தற்கொலை செய்து கொண்டார்.

சில நாட்கள் முன்பு 7 வயது சிறுமிக்கு இந்த மருத்துவர் அறுவை சிகிச்சை செய்தார். அந்த சிறுமி மரணம் அடைந்தாள். சிறுமியின் மரணம் குறித்து சோஷியல் மீடியாவில் அந்த மருத்துவர் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதனால் மனம் வருந்திய அந்த மருத்துவர் பாத்ரூம் சுவரின் மீது ‘சாரி’ என்று எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சொந்த மருத்துவமனை நடத்தி வந்த ஆர்தோபெடிக் சர்ஜன் டாக்டர் அனூப் கிருஷ்ணா (35) தற்கொலை செய்து கொண்டார். இதனை போலீசார் சந்தேகத்துக்கிடமான மரணமாக அடையாளம் கண்டு வழக்குப்பதிவு செய்து கொண்டார்கள்.

வழக்கை விசாரித்து வரும் ஒரு போலீஸ் உயரதிகாரி பேசுகையில் சர்ஜரிக்கு பிறகு அந்த சிறுமி மரணம் அடைந்ததால் மருத்துவர் கவலை அடைந்ததாக தெரிகிறது என்றார். ஆயின் அதன் பிறகு அந்த மருத்துவருக்கு வந்த துன்புறுத்தல்களும் அச்சுறுத்தல்களும் குறித்து விசாரித்து வருவதாக கூறினார்.

ALSO READ:  அருந்தமிழ் 50: திறனாய்வு!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img