தேசிய பத்திரிக்கையாளர்கள் தினத்தையொட்டி பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சுதந்திரமான செய்தியே துடிப்பான ஜனநாயகத்தின் அடிப்படை ஆதாரமாக விளங்குகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் 125கோடி இந்தியர்களின் திறன், பலம் மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வகையில் செயல்படட்டும் என்று தெரிவித்துள்ளார்.
பத்திரிக்கையாளர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்களின் கடின உழைப்பை பாராட்டுகிறேன் என்றும் ஓய்வில்லாமல் களத்தில் பணியாற்றும் பத்திரிக்கையாளர்களின் உழைப்புதான் தேசியத்தை கட்டமைக்க உதவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


