கொரோனா: இப்படியும் அறிகுறியோடு வருதாம்! ஜாக்கிரதை!

corona-test
corona-test

புதிது புதிதாக மாறுபாடு அடைந்த கொரோனா வந்துகொண்டே இருக்கிறது. 2020ம் ஆண்டு மார்ச் மாதம் போலவே 2021 மார்ச்சில் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

மக்கள் மத்தியில் அது பற்றிய அச்சம், விழிப்புணர்வுதான் இல்லை. 2020 கொரோனாவையே சமாளித்துவிட்டோம், புதிதாக வரும் கொரோனா எல்லாம் எம்மாத்திரம் என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால், மாறுபாடு அடைந்த கொரோனா மிகக் கொடூரமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

கொரோனா பாதிப்பு என்றால் சுவை உணர்வு குறைந்துவிடும், காய்ச்சல், தொண்டை வலி, தீவிர நிலையில் சுவாசப் பிரச்னை வரும் என்று நம்பியிருந்தோம். ஆனால், இப்போது பரவும் கொரோனாவின் அறிகுறிகள் வித்தியாசமாக இருக்கிறதாம்.

வாய் மற்றும் நாக்கில் புண்களை ஏற்படுத்துகிறது. பல கொரோனா நோயாளிகள் தங்களுக்கு வாயில், நாக்கில் புண் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். தீவிர காய்ச்சல், சோர்வு இதனுடன் வாய்ப்புண்ணும் இருந்தால் அது கொரோனாவுக்கான அறிகுறியாக இருக்கும் என்று பீதியைக் கிளப்புகின்றனர் மருத்துவர்கள்.

சருமத்தில் வீக்கம், குறிப்பாக காய்ச்சலுடன் கை – கால் விரல்கள் பகுதியில் வீக்கம், சோர்வு இருந்தால் அது கொரோனாவின் அறிகுறியாக இருக்கலாம் என்கின்றனர். பெரியவர்களைக் காட்டிலும் குழந்தைகள், இளம் வயதினருக்கு இது போன்று சரும வீக்கம், கொப்பளங்கள், எரிச்சல் உணர்வு ஏற்படுகிறதாம்.

இன்னொன்று மிக மோசமான அறிகுறியை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். அது வெளிப்படையாகத் தெரியாது.

மாரடைப்பு போன்ற அறிகுறியை ஏற்படுத்தும்போதுதான் அது கொரோனாவாக இருக்கலாம் என்று தெரியும் என்கின்றனர். ஆம், ரத்தத்தைக் கட்டிப்போகச் செய்கிறதாம் கொரோனா. ரத்தம் கட்டியாவதன் காரணமாக உடல் முழுக்க ரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. ரத்தக் குழாய்கள், உள் உறுப்புக்கள் பாதிக்கப்படுகின்றன.

இதன் காரணமாக இதய செயலிழப்பு, சிறுநீரக செயலிழப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம் என்று எச்சரிக்கின்றனர்.

எனவே, மக்களே தயவு செய்து கொரோனா பரவல் குறித்து அலட்சியம் காட்ட வேண்டாம். மூன்று லேயர் மாஸ்க், கைகளை அவ்வப்போது சுத்தம் செய்வது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதன் மூலம் கொரோனா பரவலுக்கு முற்றுப்புள்ளி வைத்திடுங்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

Entertainment News

Popular Categories