கொரோனா: இப்படியும் அறிகுறியோடு வருதாம்! ஜாக்கிரதை!

corona-test
corona-test

புதிது புதிதாக மாறுபாடு அடைந்த கொரோனா வந்துகொண்டே இருக்கிறது. 2020ம் ஆண்டு மார்ச் மாதம் போலவே 2021 மார்ச்சில் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

மக்கள் மத்தியில் அது பற்றிய அச்சம், விழிப்புணர்வுதான் இல்லை. 2020 கொரோனாவையே சமாளித்துவிட்டோம், புதிதாக வரும் கொரோனா எல்லாம் எம்மாத்திரம் என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால், மாறுபாடு அடைந்த கொரோனா மிகக் கொடூரமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

கொரோனா பாதிப்பு என்றால் சுவை உணர்வு குறைந்துவிடும், காய்ச்சல், தொண்டை வலி, தீவிர நிலையில் சுவாசப் பிரச்னை வரும் என்று நம்பியிருந்தோம். ஆனால், இப்போது பரவும் கொரோனாவின் அறிகுறிகள் வித்தியாசமாக இருக்கிறதாம்.

வாய் மற்றும் நாக்கில் புண்களை ஏற்படுத்துகிறது. பல கொரோனா நோயாளிகள் தங்களுக்கு வாயில், நாக்கில் புண் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். தீவிர காய்ச்சல், சோர்வு இதனுடன் வாய்ப்புண்ணும் இருந்தால் அது கொரோனாவுக்கான அறிகுறியாக இருக்கும் என்று பீதியைக் கிளப்புகின்றனர் மருத்துவர்கள்.

சருமத்தில் வீக்கம், குறிப்பாக காய்ச்சலுடன் கை – கால் விரல்கள் பகுதியில் வீக்கம், சோர்வு இருந்தால் அது கொரோனாவின் அறிகுறியாக இருக்கலாம் என்கின்றனர். பெரியவர்களைக் காட்டிலும் குழந்தைகள், இளம் வயதினருக்கு இது போன்று சரும வீக்கம், கொப்பளங்கள், எரிச்சல் உணர்வு ஏற்படுகிறதாம்.

இன்னொன்று மிக மோசமான அறிகுறியை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். அது வெளிப்படையாகத் தெரியாது.

மாரடைப்பு போன்ற அறிகுறியை ஏற்படுத்தும்போதுதான் அது கொரோனாவாக இருக்கலாம் என்று தெரியும் என்கின்றனர். ஆம், ரத்தத்தைக் கட்டிப்போகச் செய்கிறதாம் கொரோனா. ரத்தம் கட்டியாவதன் காரணமாக உடல் முழுக்க ரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. ரத்தக் குழாய்கள், உள் உறுப்புக்கள் பாதிக்கப்படுகின்றன.

இதன் காரணமாக இதய செயலிழப்பு, சிறுநீரக செயலிழப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம் என்று எச்சரிக்கின்றனர்.

எனவே, மக்களே தயவு செய்து கொரோனா பரவல் குறித்து அலட்சியம் காட்ட வேண்டாம். மூன்று லேயர் மாஸ்க், கைகளை அவ்வப்போது சுத்தம் செய்வது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதன் மூலம் கொரோனா பரவலுக்கு முற்றுப்புள்ளி வைத்திடுங்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories