December 6, 2025, 11:17 AM
26.8 C
Chennai

நீண்ட காலமாய் திருமணம் ஆகவில்லை.. 13 வயது சிறுவனை மணந்த ட்யூசன் ஆசிரியை!

marriage 4 - 2025

தன்னிடம் டியூஷன் பயின்ற 13 வயது மாணவர் ஒருவரை திருமண தோஷம் கழிப்பதற்காக ஆசிரியை திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டியூஷனுக்காக சென்ற 13 வயது மாணவர் வீடு திரும்பிய நிலையில் தனக்கு நடந்த திருமண சடங்குகள் குறித்து பெற்றோரிடம் தெரிவித்ததால் உடனடியாக ஆசிரியை மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதன் பின்னர் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரின் பஸ்தி பவா கேல் பகுதியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் நீண்ட காலமாக திருமணம் ஆகாமல் இருந்து வந்தார். அவருக்கு ஜாதகத்தில் திருமண தோஷம் இருப்பதாகவும் மைனர் சிறுவன் ஒருவனை அடையாள திருமணம் செய்தால் தோஷம் கழிந்துவிடும் எனவும் ஆசிரியையின் பெற்றோரிடம் ஆலோசனை தெரிவித்துள்ளார் ஒரு நபர்.

இதனையடுத்து ஆசிரியையிடம் டியூஷன் பயின்று வந்த 13 வயது மாணவர் ஒருவரை அந்த ஆசிரியை திருமணத்திற்காக தேர்ந்தெடுத்துள்ளார். மாணவரின் பெற்றோரிடம் பேசிய ஆசிரியை மாணவருக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்க வேண்டியிருப்பதால் ஒருவாரம் அவரது வீட்டிலேயே தங்க வேண்டும் என கோரியிருக்கிறார். இதனை ஏற்ற பெற்றோரும் மாணவரை தங்குவதற்கு அனுமதித்துள்ளனர்.

சட்டவிரோதமாக தங்கவைக்கப்பட்ட சிறுவனை கட்டாயப்படுத்தி ஆசிரியையும், அவரின் பெற்றோர்களும் திருமண சடங்குகள் செய்ததாகவும். இந்த திருமணத்தின் போது மெகந்தி வைபவம், முதலிரவு என அனைத்து சம்பிரதாயங்களும் கடைபிடிக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் வளையல்களை உடைத்து திருமண பந்தம் முறிந்ததாகவும், திருமண முறிவு சம்பிரதாயங்கள் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே ஆசிரியையின் வீட்டில் இருந்து மீண்டும் தனது வீட்டிற்கு சென்ற மாணவர் நடந்தவை குறித்து தனது பெற்றோர்களிடம் கூறியுள்ளார். இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த மாணவரின் பெற்றோர் பஸ்தி பவா கேல் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இருப்பினும் காவல்நிலைய புகார் குறித்து அறிந்த ஆசிரியையின் குடுப்பத்தினர், மாணவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர் மாணவரின் பெற்றோர் கொடுத்த புகாரை திரும்பப் பெற்றதாகவும் தெரியவந்துள்ளது.

பஸ்தி பவா கேல் காவல்நிலைய அதிகாரி ககன் தீப் சிங் கேகோன் இந்த விவகாரம் குறித்து பேசுகையில், மாணவருடன் ஆசிரியை திருமணம் செய்தது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது,

இருப்பினும் மாணவரின் பெற்றோர் புகாரை வாபஸ் பெற்று சென்றுவிட்டதாகவும் அவர் கூறினார், இருப்பினும் மூத்த காவல்துறை அதிகாரிகள் இந்த விவகாரத்தை மிகவும் சீரியசாக எடுத்துக்கொண்டு விசாரணை நடத்த உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

இதுவரை ஆசிரியை மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories