ஜம்மு காஷ்மீர்: 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை! பாதுகாப்பு படையினர் அதிரடி!

jammu kasmir
jammu kasmir

ஜம்மு-காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

திங்கட்கிழமை காலை ஷோபியான் மாவட்டத்தில் மணிஹால் பகுதியில் நடந்த தேடுதல் வேட்டையின் போது இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட அனைவரும் பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான பகை பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஒருபுறம் இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி வரும் அதே நேரத்தில், அந்நாட்டைத் தலைமையிடமாகக் கொண்ட பயங்கரவாத குழுக்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவி இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி முயற்சி செய்து வருகின்றன.

ஆனால் இந்திய பாதுகாப்பு படையினர் கண்கொத்தி பாம்பாக இருந்து அம்முயற்சிகளை முறியடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய எல்லைக்குள் ஊடுருவி அசம்பாவிதத்தில் ஈடுபட முயற்சி செய்த 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

ALSO READ:  விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

இன்று காலை ஜம்மு-காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் மணிஹால் பகுதியில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் தொடர்புடைய தீவிரவாதிகள் சிலர் ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அந்த வீட்டை முற்றுகையிட்டு தேடுதல் பணியில் ஈடுபட்டனர் அப்போது அந்த வீட்டுக்குள் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த தொடங்கினர்.

உடனே சுதாரித்துக் கொண்ட பாதுகாப்பு படையினர் அவர்கள் மீது எதிர் தாக்குதல் நடத்தினர். அப்போது வீட்டுக்குள் இருந்த 4 தீவிரவாதிகள் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர். இந்த மோதல் பலமணி நேரம் நீடித்தது.

இது குறித்து தெரிவித்த காஷ்மீர் மண்டல காவல்துறை அதிகாரி, நடந்த துப்பாக்கி மோதலில் அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என கூறியிருந்தார்.

இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய காஷ்மீர் ஐஜி விஜயகுமார், ஷோபியானில் லஷ்கர்-இ-தொய்பா உடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இரு குழுக்களுக்கிடையே சந்திப்பு நடந்தபோது இந்த அதிரடி ஆபரேஷன் நடத்தப்பட்டது. தற்போது அனைத்து பயங்கரவாதிகளும் கொள்ளப்பட்டுள்ளனர் எனக் கூறியுள்ளார்.

ALSO READ:  தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகவும், மொத்தத்தில் இதுவரை நான்கு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மார்ச் 16 அன்று ஷோபியானில் இதேபோன்ற மற்றொரு மோதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

Entertainment News

Popular Categories