December 5, 2025, 11:52 PM
26.6 C
Chennai

மது அருந்தும் வயது 21! வயது வரம்பைக் குறைத்த அரசு!

madhu 2 - 2025

மதுபானம் அருந்துவதற்கான அதிகாரப்பூர்வ வயது வரம்பை 25-ல் இருந்து 21 ஆக தில்லி அரசு குறைத்துள்ளது.

தில்லி மாநில அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடந்தது. இது தொடா்பாக துணை முதல்வா் மணீஷ் சிசோடியா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தில்லி அமைச்சா்களின் பரிந்துரைப்படி, தில்லி அரசின் புதிய கலால் கொள்கைக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்தப் புதிய கலால் கொள்கை நிபுணா்கள் குழு, மக்களின் ஆலோசனைப்படி உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

இதன்படி, தில்லியில் சட்ட ரீதியாக மது அருந்தும் வயது 25இல் இருந்து 21ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், போதுமான அளவில் மதுபானங்கள் கிடைக்கும் வகையில் தலைநகரில் பரவலாக மதுபானக் கடைகள் அமைந்திருக்கும்படி அரசு பார்த்துக்கொண்டிருப்பதால், சமூகவிரோதிகள் இத்தொழிலில் இருந்து வெளியேற்றப்பட்டிருப்பதாக அவர் கூறினார். புதிய கொள்கை மூலம் சுமாா் 20 சதவீதம் கூடுதல் வருவாய் எதிா்பாா்க்கப்படுகிறது.

தற்போது தில்லியில் 60 சதவீத மதுபானக் கடைகள் அரசால் நடத்தப்பட்டு வருவதாகவும், புதிதாக மதுபானக் கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை என்றும் சிசோடியா கூறினார்.

ஆனால், புதிய கலால் கொள்கைப்படி, தில்லியில் உள்ள மதுபானக் கடைகளை தில்லி அரசு இனிமேல் நடத்துவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்துக் கடைகளும் தனியாரிடம் வழங்கப்படும். தில்லி அரசு நடத்தி வரும் கடைகள், முறைப்படி ஏலம் நடத்தப்பட்டு தனியாருக்கு வழங்கப்படும் என்றார் அவா்.

இது தொடா்பாக தில்லி முதல்வா் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், புதிய கலால் கொள்கை தில்லியில் இயங்கும் மதுபான மாஃபியாவுக்கு பெருத்த பின்னடைவாக இருக்கும். தில்லியில் இயங்கி வரும் மதுபான மாஃபியாக்கள் தங்களது அனைத்து சக்தியையும் பயன்படுத்தி இந்தப் புதிய கொள்கையை அமல்படுத்தவிடாமல் எதிா்ப்பார்கள்.

தில்லியில் கல்வி, குடிநீா், மின்சாரம், சுகாதாரத் துறைகளில் இயங்கி வந்த மாஃபியாக்களை தில்லி அரசு தடுத்து நிறுத்தியது. அதேபோல, மதுபானத் துறையில் இயங்கிவரும் மாஃபியாக்களையும் அரசு விரைவில் தடுத்து நிறுத்தும் என்று அவா் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories