ஐயே.. இந்த மாடல் எனக்கு வேண்டாம்: செல்போனை உரியவரிடம் திருப்பிக் கொடுத்த திருடன்!

Published:

cell phone - 2026

திருடிய போனை திரும்ப வந்து அதன் உரிமையாளரிடம் கொடுத்துவிட்டு, திரும்ப கொடுத்ததின் காரணம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசம் நொய்டாவில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் நடந்து சென்ற பயணி ஒருவரிடம் இருந்து திருடன் அவர் பயன்படுத்திய செல்போனை பிடுங்கி கொண்டு ஓடிவிட்டான்.

இந்நிலையில், தனது செல்போனை இழந்த நபர் என்ன செய்வது என்று தெரியாமல் அங்கையே திகைத்து நின்று கொண்டிருந்துள்ளார்.

msg - 2026

ஆனால், அவர் சற்று அதிர்ந்து போகும் விதமாக செல்போனை திருடிச்சென்ற நபர், திரும்ப இவரை நோக்கி வந்துள்ளார். என்ன நடக்கிறது என்று இவர் யோசித்து கொண்டிருந்த போது செல்போனை அதன் உரிமையாளாரிடம் ஒப்படைத்த திருடன்,

திருடி சென்ற திருடன் திரும்ப போனை திரும்பி கொடுத்துவிட்டு, அந்த போன் ஒன் ப்ளஸ் என நினைத்துதான் தான் திருடியதாகவும், ஆனால் அது ஒன் ப்ளஸ் இல்லை சாம்சங் Galaxy S10 Plus என்று தெரிந்ததும், இந்த போன் தனக்கு தேவை இல்லை என்று திருப்பி கொடுத்து விட்டு சென்றுள்ளார்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

மேலும், இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Related articles

Recent articles

spot_img