பள்ளத்தில் விழுந்த யானை! பத்திரமாக மீட்ட வனத்துறையினர்!

elephant 4 - 2026

வனப்பகுதிகளை விட்டு உணவு தேடி வரும் யானைகள் பள்ளத்தில் சிக்கிக்கொள்ளும் சம்பவங்களை நிறைய பார்த்திருப்போம்.

அப்படிப்பட்ட அபாயகரமான சூழ்நிலையில், யானையை வனத்துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு, பல மணிநேரம் போராடி மீட்பார்கள். ஆனால் மேற்கு வங்கத்தில் வனத்துறையினர் ஒன்றிணைந்து இயற்பியல் தத்துவத்தின் துணையுடன் பள்ளத்தில் விழுந்த யானையை மீட்டுள்ள வீடியோ ஒன்று, பரவலாக பகிரப்பட்டு பாராட்டுக்களை குவித்து வருகிறது.

மேற்கு வங்க மாநிலத்தின் மிதினாபுரத்தில் யானை குட்டி ஒன்று பள்ளத்தில் விழுந்து சிக்கித் தவித்தது. இதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

டி.எப்.ஓ சந்தீப் பெர்வால் தலைமையிலான குழு உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, மீட்பு பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்தனர். வழக்கமாக யானையை கயிறு கட்டியோ, பலகைகள், மரத்துண்டுகள் மீது ஏற்றியோ பள்ளத்தில் இருந்து மீட்பது போல் அல்லாமல், புதுவித டெக்னிக் ஒன்றை வனத்துறையினர் பயன்படுத்தி இருப்பது பாராட்டுக்களை குவித்து வருகிறது.

ஐஎப்எஸ் அதிகாரி பிரவீன் கஸ்வான் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், மிதினாபுரத்தில் யானை ஒன்று பள்ளத்தில் விழுந்துவிட்டது. இயற்பியலின் ஆர்க்கிமிடிஸ் கொள்கையைப் பயன்படுத்தி அந்த யானை மீட்கப்பட்டது” என பதிவிட்டுள்ளார்.

ALSO READ:  தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

அந்த வீடியோவில், யானை தவறி விழுந்த பள்ளம் முழுவதும் தண்ணீர் நிரப்பப்படுகிறது. யானை மிதக்க ஆரம்பித்ததும், சப்போர்ட்டிற்காக கயிறு கட்டப்பட்டு மேலே இழுக்கப்படுகிறது.

இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. யானையை மீட்கிறேன் என்ற பெயரில் துன்புறுத்தாமல், இயற்பியலை பயன்படுத்தி வனத்துறையினர் மீட்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது பாராட்டுக்களை குவித்து வருகிறது.

ஆர்க்கிமிடிஸ் தத்துவம் “ஒரு திரவத்தில் மூழ்கியிருக்கும் உடலில்செலுத்தப்படும் மேல்நோக்கி மிதக்கும் விசையானது, இடம்பெயர்ந்த திரவத்தின் நிறை மையத்தில் உடல் இடம்பெயர்ந்து மேல்நோக்கிச் செயல்படும் திரவத்தின் எடைக்குச் சமம்.” என்பதாகும்.

அதனை அடிப்படையாக கொண்டே வனத்துறையினர் பள்ளத்தில் தண்ணீரை நிரப்பி, அதன் மேற்பரப்பில் யானை மிதந்து வரும் போது லாவகமாக மீட்டு கவனம் ஈர்த்துள்ளனர்.

பிப்ரவரி 21ம் தேதி நள்ளிரவு 1 மணி அளவில் பள்ளத்தில் விழுந்த யானையை வனத்துறையினர் ஆர்க்கிமிடிஸ் தத்துவத்தை பயன்படுத்தி 4 மணி அளவில் பத்திரமாக மீட்டுள்ளனர்.

அந்த யானை உடனடியாக வனப்பகுதிக்கு திரும்பியதாகவும், தற்போது பாதுகாப்பாக இருப்பதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ALSO READ:  சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

நேற்று வெளியிடப்பட்ட வீடியோ இதுவரை 1.5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் மற்றும் 7 ஆயிரத்து 900க்கு அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது.

வீடியோவை பார்க்கும் பலரும் மனிதநேயம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை இதுபோன்ற வீடியோக்கள் தான் நிரூபிப்பதாகவும்,யானை மீட்ட வனத்துறையினருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

Entertainment News

Popular Categories