தோற்றது மகிழ்ச்சி: அனுஷ்கா நடிப்பு அபாரம்: ராம்கோபால் வர்மா டிவிட்!

Published:

ram-gopal-varma மும்பை: உலகக் கோப்பை அரையிறுதியில் இந்திய அணி தோற்றது மகிழ்ச்சி, அனுஷ்காவின் நடிப்பு அபாரம் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் ராம்கோபால் வர்மா. அவர் தனது டிவிட்டர் பக்கத்தில்…. நாட்டு மக்களின் கிரிக்கெட் என்ற மோசமான வியாதியை குணப்படுத்துமாறு, என் நாட்டில் உள்ள எல்லா கடவுள்களையும் வேண்டிக் கொள்கிறேன். நான் கிரிக்கெட்டை வெறுக்கிறேன். ஏனென்றால் அது நாட்டிலுள்ள ஆண்களை வேலை செய்வதை நிறுத்திவிட்டு டிவி பார்க்க வைத்து விடுகிறது. இந்தியா தோற்றதில் மகிழ்ச்சி. நான் கிரிக்கெட்டை வெறுக்கிறேன். அதைவிட அதிகமாக கிரிக்கெட்டை நேசிப்பவர்களை வெறுக்கிறேன். – என்று கூறியுள்ளார். மேலும், நான் தனிப்பட்ட வகையில் அனுஷ்கா சர்மாவின் நடிப்பை மிகவும் விரும்புகிறேன். அது அவர் விரும்பும் நண்பரின் செயல்திறனைக் காட்டிலும் அதிக ரசனையுடன் இருந்தது என்று கூறியுள்ளார். நான் மற்ற நாடுகளையும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்… இந்திய அணியைத் தோற்கடியுங்கள். இந்தியர்கள் கிரிக்கெட் விளையாடுவது நிறுத்தப் படும்வரை, அவர்கள் அதைப் பார்ப்பது நிறுத்தப்படும் வரை … என்று கூறியுள்ளார். இந்த டிவிட்டில், கிரிக்கெட், ஆல்கஹால், சிகரெட்டை விட அதிக போதையாக்கும் தேசிய நோய் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இவரது ட்வீட்களுக்கு ஆதரவாகவும் எதிராகவும் ட்விட்டரில் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img