ஜனவரி 15 – இன்று இந்திய ராணுவ தினம்!

Published:

indian army day - 2026

இந்திய ராணுவ தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

ஃபீல்டு மார்ஷல் ‘கோடந்தேரா’ எம் கரியப்பா (அப்போது லெப்டினன் ஜெனரல்) இந்தியாவின் முதல் கமாண்டர் இன் சீஃப் ஆக, அன்றைய இந்தியாவின் கடைசி பிரிட்டிஷ் கமாண்டராக இருந்த ஜெனரல் சர் பிரான்சிஸ் புட்சாருக்கு அடுத்து ஜனவரி 15, 1949 அன்று பொறுப்பேற்றார்.

இந்திய தலைநகர் நியூ டெல்லியிலும் அனைத்து முக்கிய அலுவலகங்களிலும் இன்று ராணுவ தினம் கொண்டாடப்படுகிறது.

நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பதற்காக வாழ்க்கையைத் தியாகம் செய்யும் ராணுவ வீரர்களை பாராட்டும் நாளாக இதனை கொண்டாடுகிறோம்.

army - 2026

இந்தியாவின் பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றான இந்தியன் ஆர்மியின் முக்கிய கடமை இந்தியாவை பாதுகாப்பதோடு நாட்டில் அமைதியை நிலைநாட்டி எல்லைப் பாதுகாப்பை கண்காணிப்பதும் ஆகும்.

தற்போது இந்தியாவின் ராணுவத்தில் சுமார் 25 லட்சம் வீரர்கள் உள்ளனர். இதில் 12 லட்சம் வீரர்கள் ரிசர்வ் படை. அதாவது இந்த வீரர்கள் தேவை ஏற்பட்டால் மட்டுமே களத்தில் இறங்குவார்கள்.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

சில நாடுகளில் ஒவ்வொரு பிரஜையும் கட்டாயம் ஆர்மியில் பணியாற்ற வேண்டும் என்று சட்டம் உள்ளது. இந்தியாவில் அவ்வாறு இல்லை. தன்னார்வத்தோடு நாட்டு தொண்டாற்ற விரும்புபவர்கள் சேரலாம்.

ஐநா சபை மேற்கொண்ட பல அமைதி பாதுகாப்பு செயல்களிலும் இந்திய ராணுவம் பங்குகொண்டு சிறப்பாக செயலாற்றி வருகிறது.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img