போலி சாமியார்.. மாந்திரீகம்.. புதையல் எடுப்பு.. சிலைக் கடத்தல்! 5 பேர் கைது!

5 arrest idol theft krishnagiri - 2026

ஆள் கடத்தலின் பின்னணி என்ன என்று விசாரித்து வருகிறது காவல்துறை ! ஐந்து பேர் கைது ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல்!

போச்சம்பள்ளி மத்தூர் அருகே கார் வாங்கி விற்க்கும் தொழில் புரிந்துவரும் ஸ்ரீதரை கடத்தி பணம் பறிக்க முயற்சித்த சிலை கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஐந்து பேரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர் போலீஸார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த சந்தூர் அருகேயுள்ள நல்லப்பநாயக்கனூர் கிராமத்தை சேர்ந்த ‌ ஶ்ரீதர் என்பவர் கார் வாங்கி விற்க்கும் தொழில் புரிந்து வகிறார்.

இவருக்கும் வேலம்பட்டி அடுத்த கொட்டாவூர் கிராமத்தை சேர்ந்த சாமியார் பெரியசாமி என்பவருக்கும் கடந்த ஆறு மாதத்திற்குமுன் நட்பு ஏற்பட்டுள்ளது. இவர்களுடன் மேலும் சில நண்பர்கள் சேர்ந்து மத்தூர் அடுத்த கூச்சூர் அருகே புதையல் இருப்பதாகவும் அங்கு மூன்று சாமி சிலைகள் மற்றும் இரிடியம் சொம்பு ஒன்றும் இருக்கும் என சாமியார் குறி சொன்னதாகவும் கூறப்படுகிறது.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

இதனை நம்பிய ஸ்ரீதர் புதையலை எடுக்க ஆசைப்பட்டு சாமியாரிடம் கேட்டுள்ளார். அப்போது சாமியார் பெரியசாமி அந்த புதையலை எடுக்க நாகமணி வேண்டும் என்றும் அது பாம்பு வாயில் இருந்து காக்கும் என்றும் அது ஏற்கெனவே தன்னிடம் உள்ளதாகவும் அதற்கு 4 லட்சத்து 5 ஐம்பதாயிரம் செலவாகும் என கூறியுள்ளார்.

இதனை முழுமையாக நம்பிய ஸ்ரீதர் முழு பணத்தையும் சாமியாரிடம் கொடுத்துள்ளார். பின்பு ஒரு நாள் பெரியசாமிக்கு சாமி வந்து நாகமணியை வைத்து புதையல் இருக்கும் இடத்தில் குழி தோண்டி மூன்று சாமி சிலைகள் மற்றும் ஒரு இருடியம் சொம்பு ஆகியவற்றை எடுத்துக் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

புதையல் எடுக்க பூஜை செய்த நாகமணியை புதையலோடு சேர்த்து சில நாட்கள் வைத்திருக்க வேண்டும் எனக் கூறி நாகமணியை பிரித்துப் பார்க்கக் கூடாது என்றும் மீறி பிரித்து பார்த்தால் அது உன்னை காவு வாங்கி (கொன்று விடும்) விடும் என்றும் கூறி ஸ்ரீதரிடம் ஒப்படைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையும் மீறி ஆர்வ மிகுதியால் ஸ்ரீதர் அதைப் பிரித்துப் பார்த்தபோது அது வெறும் ரப்பர் துண்டு என்பது தெரிய வந்துள்ளது. இதை அடுத்து சாமியாரிடம் கேட்டபோது உஷாரான சாமியார் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து எங்களை நீ ஏமாற்றி பல லட்சங்களுக்கு யாரிடமோ விற்று விட்டாய்… எங்களுக்கு சேர வேண்டிய பங்கை கொடுத்துவிடு என சண்டையிட்டுள்ளனர்.

ALSO READ:  நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

இதனால் ஏற்பட்ட பிரச்னையால் கடந்த 26ஆம் தேதி பெரியசாமி, சின்னப்பன் இருவரும் சேர்ந்து தன்னை ஆட்கள் வைத்து கடத்தி இருக்கலாம் எனவும் கடத்திய நபர் அடையாளம் தெரியாது எனவும் ஞாயிற்றுக்கிழமை மாலை மத்தூர் காவல் நிலையத்திற்க்கு வந்து தெரிவித்துள்ளார்.

மேலும் உடல் முழுவதும் காயம் ஏற்பட்டுள்ளதால் இன்று காலை ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து புகார் அளித்தார். பின்னர் துரித விசாரணை நடத்திய ஊத்தக்கரை காவல் துணை கண்காணிப்பாளர் ராஜபாண்டியன் விசாரணை மேற்கொண்டபோதுதான் கடத்தப்பட்ட ஸ்ரீதரும் சேர்ந்து சட்டத்திற்க்கு புறம்பாக சிலை கடத்தல் செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட போலி சாமியார் பெரியசாமி, சின்னப்பன், சக்திவேல், கோவிந்தராஜ், சரவணன் என ஐந்து பேரை பிடித்து தொடந்து விசாரித்து வந்தனர். இதில் சிலை கடத்தல் கும்பலிடம் இருந்து மூன்று வெண்கல சிலைகளையும், பணம் ரூபாய் 1 லட்சம் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து சிறையிலடைத்தனர்.

ALSO READ:  வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

மத்தூர் காவல் நிலையத்தில் உள்ள காவலர்கள் பணம் பெற்றுக் கொண்டு இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துவதாகக் கூறப்பட்டது. இருப்பினும் இதன் பின்னர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் உடனடியாக மீண்டும் அனைவரையும் மத்தூர் காவல் நிலையத்திலேயே பணியை தொடர அனுமதித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Entertainment News

Popular Categories