ஒரு கள்ளகாதலனோடு இருந்ததை மற்றொரு கள்ள காதலன் பார்த்ததால் ஆத்திரமடைந்த கள்ளகாதலி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
32வயதான பவித்திரி தேவி, பீகார் மாநிலத்தின் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள பிஷுன்பூர் கிராமத்தில் வசித்து வந்துள்ளார். இவர் மீது இவரது கணவருக்கு இருந்த சந்தேகம் காரணமாக ஏற்பட்ட தகராறில் இவர் தனது கணவரை விட்டு பிரிந்து வசித்து வருகிறார்.
இந்நிலையில், இவருக்கு 40 வயதான மஞ்சி என்ற திருமணமான நபரோடு மட்டும் இல்லாமல் பவித்திரி என்ற மற்றொரு நபரோடும் தொடர்பு வைத்திருந்தார்.
இந்நிலையில் கடந்த மே 10ம் தேதியன்று அந்த பவித்திரி என்பவரோடு ஒரு வயல்வெளியில் தனிமையிலிருந்த போது மஞ்சி அதை பார்த்துவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த மஞ்சி அந்த பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அந்த பெண் அங்குள்ள ஒரு கத்தியை எடுத்து மஞ்சியின் ஆண் குறியை துண்டாக வெட்டியுள்ளார்.
இதனால் பெரும் பிரச்சனை ஏற்பட்டு விடும் என்று பதறி போன அந்த பெண் அந்த இடத்தில் இருந்து தப்பித்து சென்றுள்ளார்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மஞ்சியின் மனைவி பாஸ்பதி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் கணவரை அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு மருத்துவர்கள் துண்டான உறுப்பை ஓட்ட வைத்தனர். அதன் பிறகு மஞ்சியின் மனைவி பாஸ்பதி அந்த பெண் மீது போலீசில் புகார் அளித்ததை அடுத்து போலீசார் வழக்கு பதிந்து அந்த பெண்ணை கைது செய்தனர்.