கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான மறுவாழ்வு! மத்திய அரசு வெளியிட்ட நடைமுறைகள்!

ministry of child and women empowerment
ministry of child and women empowerment

கொரோனா பெருந்தொற்று காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு, மறுவாழ்வு அமைத்துத் தருவதற்கான நடைமுறைகள் குறித்து, மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொரோனா 2ஆம் அலை காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால், குழந்தைகள் பலர் பெற்றோரை இழந்து ஆதரவற்றவர்கள் ஆகியுள்ளனர். இந்தக் குழந்தைகளைத் தத்து எடுக்க முன்வருமாறு, செய்திகள், விளம்பரங்கள் சமூக ஊடகங்களில் பரப்பப்படுகின்றன. இதற்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.

இது போன்ற செய்திகள் சட்டவிரோதம் ஆனவை. இதனால் குழந்தைகள் கடத்தப்படுவதற்கான அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதையோ அல்லது செய்திகளைப் பகிர்ந்து ஊக்குவிப்பதையோ தவிர்க்க வேண்டும் என்று, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் பெற்றோரை இழந்து நிராதரவாக விடப்படும் குழந்தைளுக்கு மறுவாழ்வு அமைத்துக் கொடுப்பதற்கான சட்டபூர்வ நடைமுறைகள் அடங்கிய பொது அறிவிப்பை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி பெற்றோரை இழந்த குழந்தையை பயண நேரத்தை தவிர்த்து 24 மணி நேரத்திற்குள் மாவட்ட குழந்தைகள் நலக் குழு (CWC) முன் ஆஜர்படுத்த வேண்டும்.

ALSO READ:  நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

குழந்தையின் உடனடித் தேவையை குழந்தைகள் நலக் குழு கண்டறிந்து, குழந்தைளின் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகள் குறித்து தகுந்த உத்தரவுகளை அனுப்ப வேண்டும்.

குழந்தையை பராமரிப்பாளர்களிடம் ஒப்படைப்பது அல்லது நிறுவனம் அல்லது நிறுவனம் சார்ந்த பராமரிப்பு மையத்தில் தங்க வைப்பது குறித்த முடிவுகளை குழந்தைகள் நலக் குழு எடுக்க வேண்டும்.

சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளபடி, குழந்தைகளை அவர்களின் குடும்பத்திலும் சமூகச் சூழலிலும் முடிந்தவரை தக்க வைத்துக் கொள்ள முயற்சி மேற்கொள்ளப்படும். அவர்களின் சுற்றுப்புறங்களில் அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்து, அவர்களின் நலன் பாதுகாக்கப்படும்.

குழந்தைகள் அவர்களின் உறவினர்கள் யாரிடமாவது ஒப்படைக்கப்பட்டாலும் குழந்தைகள் நலக் குழு தொடர்ந்து குழந்தையின் நலனை கண்காணிக்கும்.

குழந்தையின் அடையாளத்தை பாதுகாக்க, தேவையற்ற துன்பங்களைத் தவிர்க்க கவனமாக இருக்க வேண்டும்…

இவ்வாறு, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories