கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான மறுவாழ்வு! மத்திய அரசு வெளியிட்ட நடைமுறைகள்!

ministry of child and women empowerment
ministry of child and women empowerment

கொரோனா பெருந்தொற்று காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு, மறுவாழ்வு அமைத்துத் தருவதற்கான நடைமுறைகள் குறித்து, மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொரோனா 2ஆம் அலை காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால், குழந்தைகள் பலர் பெற்றோரை இழந்து ஆதரவற்றவர்கள் ஆகியுள்ளனர். இந்தக் குழந்தைகளைத் தத்து எடுக்க முன்வருமாறு, செய்திகள், விளம்பரங்கள் சமூக ஊடகங்களில் பரப்பப்படுகின்றன. இதற்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.

இது போன்ற செய்திகள் சட்டவிரோதம் ஆனவை. இதனால் குழந்தைகள் கடத்தப்படுவதற்கான அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதையோ அல்லது செய்திகளைப் பகிர்ந்து ஊக்குவிப்பதையோ தவிர்க்க வேண்டும் என்று, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் பெற்றோரை இழந்து நிராதரவாக விடப்படும் குழந்தைளுக்கு மறுவாழ்வு அமைத்துக் கொடுப்பதற்கான சட்டபூர்வ நடைமுறைகள் அடங்கிய பொது அறிவிப்பை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி பெற்றோரை இழந்த குழந்தையை பயண நேரத்தை தவிர்த்து 24 மணி நேரத்திற்குள் மாவட்ட குழந்தைகள் நலக் குழு (CWC) முன் ஆஜர்படுத்த வேண்டும்.

குழந்தையின் உடனடித் தேவையை குழந்தைகள் நலக் குழு கண்டறிந்து, குழந்தைளின் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகள் குறித்து தகுந்த உத்தரவுகளை அனுப்ப வேண்டும்.

குழந்தையை பராமரிப்பாளர்களிடம் ஒப்படைப்பது அல்லது நிறுவனம் அல்லது நிறுவனம் சார்ந்த பராமரிப்பு மையத்தில் தங்க வைப்பது குறித்த முடிவுகளை குழந்தைகள் நலக் குழு எடுக்க வேண்டும்.

சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளபடி, குழந்தைகளை அவர்களின் குடும்பத்திலும் சமூகச் சூழலிலும் முடிந்தவரை தக்க வைத்துக் கொள்ள முயற்சி மேற்கொள்ளப்படும். அவர்களின் சுற்றுப்புறங்களில் அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்து, அவர்களின் நலன் பாதுகாக்கப்படும்.

குழந்தைகள் அவர்களின் உறவினர்கள் யாரிடமாவது ஒப்படைக்கப்பட்டாலும் குழந்தைகள் நலக் குழு தொடர்ந்து குழந்தையின் நலனை கண்காணிக்கும்.

குழந்தையின் அடையாளத்தை பாதுகாக்க, தேவையற்ற துன்பங்களைத் தவிர்க்க கவனமாக இருக்க வேண்டும்…

இவ்வாறு, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

Topics

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

திமுகவின் வன்முறையை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மலர்வளையம் வைப்பவர்கள்… சுடுகாட்டுக்கே வழி சொல்வார்கள்!

யாரை வழிகாட்டியாகக் கொள்கிறோமோ அவர் கொண்டு சேர்க்கும் இடத்துக்குத்தான் போய்ச்சேர முடியும். வெட்டியாரிடம் வழிகேட்டால் அவர் சுடுகாட்டுக்குத்தான் வழிகாட்டுவார். தவறு வெட்டியார் மீது அல்ல.

Entertainment News

Popular Categories