
கொரோனாவுக்கான தடுப்பூசி நிர்வாகம் குறித்த தேசிய நிபுணர் குழு அளித்த புதிய பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டதாக மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது.
பரிந்துரைகளின்படி, கொரோனா தடுப்பூசி கொரோனா நோயிலிருந்து மீண்டவர்கள் மூன்று மாதங்களுக்கு பிறகு தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
“முதல் டோஸுக்குப் பிறகு நோய்த்தொற்று ஏற்பட்டால், கொரோனாவிலிருந்து மருத்துவ மீட்புக்குப் பிறகு, மூன்று மாதங்களுக்கு இரண்டாவது டோஸ் எடுப்பது ஒத்திவைக்கப்பட வேண்டும்.
மருத்துவமனையில் சேர்ப்பது அல்லது ஐ.சி.யூ பராமரிப்பு தேவைப்படும் வேறு எந்த தீவிர நோயும் உள்ளவர்கள் தடுப்பூசி பெறுவதற்கு 4-8 வாரங்கள் வரை காத்திருக்க வேண்டும்.” என்று மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
மேலும், ஒரு நபர் தடுப்பூசி பெற்ற 14 நாட்களுக்குப் பிறகு அல்லது கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் ஆர்டி-பிசிஆர் எதிர்மறையை பரிசோதித்த பிறகு இரத்த தானம் செய்யலாம் என்று அது கூறியது.
“பாலூட்டும் பெண்களுக்கு தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது. தடுப்பூசிக்கு முன் விரைவான ஆன்டிஜென் சோதனையால் தடுப்பூசி பெறுபவர்களை பரிசோதிக்க தேவையில்லை” என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு வழங்கும் முன்கூட்டியே தெரிவுசெய்தலின் படி, மே 1 முதல் ஜூன் 15 வரை மொத்தம் 5.86 கோடி கொரோனா தடுப்பூசி அளவுகள் அவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.
கூடுதலாக, தடுப்பூசி உற்பத்தியாளர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நேரடி கொள்முதல் செய்வதற்கு ஜூன் இறுதி வரை 4.87 கோடி டோஸ் கிடைக்கும் என்று சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.


