மனைவியின் அந்தரங்க போட்டோக்களை அவரது சகோதரனுக்கு அனுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
25 வயதான பெண் ஒருவர், மத்திய பிரதேச மாநிலம் போபாலில் வசித்து வந்துள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், கல்யாணம் ஆன நாள் முதல் அந்த பெண்ணின் கணவன் வீட்டார் அவரிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்து வந்துள்ளார்.
அது மட்டும் இல்லாமல், அந்த பெண்ணின் பெட் ரூமில் கேமேரா ஒன்றை அவருக்கு தெரியாமல் வைத்து அவரின் அந்தரங்க படங்களை எடுத்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் அந்த கணவனின் வரதட்சனை கொடுமை தாங்க முடியாத அந்த பெண் தனது கணவர் மீது அங்குள்ள காவல் நிலையம் ஒன்றில் அவர் மீது புகார் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்த நிலையில், அந்தக்கனவர் அந்த பெண்ணின் வரதட்சணை புகாரை வாபஸ் பெறுமாறு மிரட்டியுள்ளார்.
பின்னர், அவரது மனைவியோட நெருக்கமாக இருந்த போது எடுத்த படங்களை அவரின் சகோதரனுக்கு அனுப்பி, அவரின் வரதட்சணை புகாரை வாபஸ் பெற வில்லையென்றால் இந்த படங்களை சமூக ஊடகத்தில் வெளியிடுவதாக மிரட்டினார்.
ஆனால் அந்த பெண், மீண்டும் இது குறித்து போலீசாரிடம் புகாரளித்துள்ளார். இதனையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.