February 21, 2026, 12:47 PM
29.5 C
Chennai

அதிர்ச்சி: ATM இல் பணம் எடுக்கிறீர்களா? முக்கிய அறிவிப்பு வெளியிட்ட RBI!

atm 1
atm 1

ஏடிஎம் மிஷின்கள் பயன்படுத்துதல் மற்றும் வங்கிகளால் ஏற்படும் பராமரிப்பு செலவுகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பரிவர்த்தனைகளுக்கான பரிமாற்றக் கட்டணத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தி உள்ளது. இது மக்களிடையே மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கான பரிமாற்ற கட்டமைப்பில் ஒரு குறிப்பிட்ட கவனம் செலுத்தி ஏடிஎம் கட்டணங்களை முழுவதும் மறுபரிசீலனை செய்ய ரிசர்வ் வங்கி 2019 ஜூன் மாதம் ஒரு குழுவை அமைத்தது.

அந்த குழுவின் அடிப்படையில், ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கான பரிமாற்றக் கட்டமைபை கடைசியாக ஆகஸ்ட் 2012 லும், வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டிய கட்டணங்கள் கடைசியாக ஆகஸ்ட் 2014 லும் மாற்றியமைக்கப்பட்டது.

அதையடுத்து இப்போது தான் இந்த திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளதாக கூறியுள்ளது ரிசர்வ் வங்கி.

atm
atm

அதாவது, ஒரு வாடிக்கையாளர் ஏடிஎம் கார்டு சொந்தமில்லாத ஏடிஎம்மில் பரிவர்த்தனை செய்யும்போது, அந்த கார்டு உள்ள வங்கி ஏடிஎம் ஆபரேட்டருக்கு ஒரு பரிமாற்ற கட்டணத்தை செலுத்துகிறது. தற்போது, அந்த கட்டணம் நிதி பரிவர்த்தனைகளுக்கு முதலில் ரூ.15 வசூலிக்கப்பட்டது.

இது தற்போது ரூ.17 ஆக உயர்த்தியுள்ளது. நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு ரூ.5 லிருந்து ரூ.6 ஆக உயர்த்தியுள்ளது. இந்த மாற்றியமைக்கப்பட்ட கட்டண அமைப்பு 2021 ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.

மேலும் ஒரு வாடிக்கையாளர் பிற வங்கி ஏடிஎம்களில் இருந்து செய்ய தகுதியுள்ள இலவச பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையைத் தாண்டிய ஒரு பரிவர்த்தனைக்கு ரூ .20 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த கட்டணத்தை ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.20 லிருந்து ரூ.21ஆக வசூலிக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த நடைமுறை 2022-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி அமலாகும் என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories