December 6, 2025, 3:31 AM
24.9 C
Chennai

போனில் இராணுவத்தை உளவுப் பார்த்த பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பு! இரு இளைஞர்கள் கைது!

cellphone speech - 2025

இந்திய ராணுவத்தின் தென்னக படைப் பிரிவின் புலனாய்வு குழுவும், கர்நாடக பயங்கரவாத ஒழிப்பு பிரிவும் இணைந்து சட்ட விரோத தொலைபேசி பரிமாற்றத்தை கடந்த சில மாதங்களாக கண்காணித்தன. அதில் பாகிஸ்தானின் தீவிரவாத அமைப்புகளுக்காக ராணுவம் தொடர்பான அழைப்புகளை உளவு பார்த்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து பெங்களூரு மாநகர காவல் ஆணையர் கமல்பந்த் கூறுகையில், ”கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த இப்ராகிம் முல்லட்டி பி முகமதுகுட்டி (36), தமிழகத்தில் உள்ள திருப்பூரை சேர்ந்த கவுதம் பி.விஸ்வநாதன் (27) ஆகிய இருவரும் பெங்களூருவில் 6 சட்டவிரோத தொலைபேசி பரிமாற்ற மையங்களை நடத்துவதாக ராணுவ புலனாய்வு பிரிவினர் தகவல் கொடுத்த‌னர்.

இதையடுத்து கர்நாடக பயங்கரவாத ஒழிப்பு படையினர் மேற்கொண்ட சோதனையில், 960 சிம்கார்டுகளை பயன்படுத்தி சர்வதேச அழைப்புகளை, உள்ளூர்அழைப்புகளாக பரிமாற்றம் செய்துள்ளது தெரிந்தது.

இதன் மூலம் தொலைத் தொடர்பு துறைக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியதுடன், பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளுக்கு இந்திய ராணுவத்தை உளவு பார்த்ததும் தெரிந்தது.

இருவரையும் கைது செய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்” என்றார். இதுகுறித்து ராணுவத்தின் தென்னக படைப்பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:

சில வாரங்களுக்கு முன் கிழக்கு இந்தியாவில் உள்ள ராணுவ மையத்துக்கு ஒரு அழைப்பு வந்தது. அதை இடை மறித்து ராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரித்ததில், ​​பாகிஸ்தான் உளவாளி ஒருவர் ராணுவத்தின் மூத்த அதிகாரி போல நடித்து ராணுவம் தொடர்பான விபரங்களை கேட்டார்.

இதுகுறித்து மேலும் விசாரித்த போது ராணுவ மைய கட்டுப்பாட்டு அலுவலகம் (எம்.சி.ஓ), பாதுகாப்பு முதன்மை கண்காணிப்பாளர் அலுவலகம் (பி.சி.டி.ஏ) போன்ற அமைப்புகளுக்கும் இதுபோன்று மர்ம நபர்கள் விபரங்களை திரட்டும் வகையில் தொலைபேசியில் பேசியது தெரியவந்தது.

இதன் பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த உளவு அமைப்பு அங்குள்ள தீவிரவாத அமைப்புகளுக்கு சட்டவிரோத தொலைபேசி பரிமாற்றம் மூலம் தகவல்களை திரட்டியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் மூலம் பாகிஸ்தானின் வாய்ஸ் ஓவர் இன்டர்நெட் புரோட்டோகால் (VoIP) அழைப்புகள் சாதாரண இந்திய செல்போன் அழைப்பாக மாற்றப்பட்டுள்ளன.

நாட்டின் பிற பகுதிகளிலும் சட்டவிரோத தொலைபேசி பரிமாற்றம் நடைபெறுகின்றனவா? என்பதை கண்டுபிடிக்கும் வகையில் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories