வேறொரு நபருடன் ஓடிய மனைவியை கணவனே நிர்வாண தண்டனை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தில், கஜூரி என்ற பழங்குடியின கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த 23 வயது பெண், திருமணமான நிலையில், வேறொரு நபருடன் ஓடினார். அவருக்கு தண்டனை வழங்க முடிவு செய்த கிராம மக்கள், கணவனை விட்டு ஓடிச் சென்ற பெண்ணை நிர்வாணப்படுத்தி, கிராமத்தை சுற்றி வலம் வர உத்தரவிட்டனர்.
இதையடுத்து, அந்த பெண்ணின் ஆடைகளை கிழித்தெறிந்த கணவன், அவரை சாலையில் நிர்வாணமாக இழுத்து சென்றார்.
இந்த சம்பவங்களை படம் பிடித்த அந்த கிராமத்து மக்கள், அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார், கணவன் உட்பட 18 பேரை கைது செய்தனர்.