December 6, 2025, 10:09 AM
26.8 C
Chennai

பிடிப்பட்ட இரட்டைத் தலை பாம்பு: இணையத்தில் வைரல்!

snake
snake

உத்தரகாண்ட் மாநிலத்தில் பிடிப்பட்ட அரியவகை இரண்டு தலை நாகப்பாம்பு ஒன்றின் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் விகாஸ் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தொழிற்கூடம் ஒன்றில் அரியவகை இரண்டு தலை நாகப்பாம்பு ஒன்று பிடிபட்டுள்ளது. பாம்பை பார்த்த அந்த பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கவே, அவர்கள் அந்த பகுதியை சேர்ந்த பாம்பு பிடிக்கும் வீரரான அடில் மிர்சா என்பவரை அழைத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த அடில் மிர்சா, இரண்டுதலை கொண்ட அந்த நாக பாம்பை பிடித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், கடந்த 15 வருடங்களாக பாம்பு பிடிக்கும் தொழிலை தான் செய்துவருவதாகவும், இதுவரை இரண்டுதலைக்கொண்ட நாகத்தை பார்த்ததே இல்லை. இதுதான் முதல் முறை என கூறியுள்ளார்.

மேலும், ஒன்னரை அடி நீளம் மட்டுமே இருந்த அந்த பாம்பு பிறந்து இரண்டு வாரமான குட்டி எனவும் அந்த பாம்பை பிடித்த அடில் மிர்சா தெரிவித்துள்ளார். இரண்டுதலை கொண்ட அந்த நாக பாம்பு தற்போது டேராடூனில் வனவிலங்கு பூங்காவில் வைக்கப்பட்டுள்ளது.

கால்நடை மருத்துவர்கள் அந்த பாம்பை சோதனை செய்துவருகின்றனர். பரிசோதனைக்கு பிறகு அந்த பாம்பு வனப்பகுதியில் விடுவதா அல்லது ஆய்வுக் கூட்டத்தில் வைப்பதா என்பது தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இரண்டுதலை கொண்ட அந்த நாகத்தின் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி கடும் வைரலாகிவருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories