பிரபல வில்லன் நடிகர் உயிரிழப்பு!

Published:

rishbhava
rishbhava

பிரபல வில்லன் நடிகர் திடீர் உடல் நலக்குறைவால் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல மலையாள நடிகர் ரிஸபவா. இவர் கேரள மாநிலம் கொச்சியை பூர்விகமாக கொண்டவர்.

ரிஸபவா 1990 ஆம் ஆண்டு ஷாஜி கயிலாஸ் இயக்கத்தில் வெளியான டாக்டர் பசுபதி என்ற படத்தின் மூலம் சினிமா உலகுக்கு அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார் ரிஸபவா. பெரும்பாலும் மிரட்டும் வில்லன் கதாப்பாத்திரத்திலேயே நடித்துள்ளார் ரிஸபவா. ஹரிஹர் நகர் படத்தில் அவரது கதாப்பாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. 1990 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில் முன்னணி வில்லன் நடிகராக வலம் வந்தார்.

120க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ரிஸபவா, அதிகப்படியாக வில்லன் கேரக்டர்களிலேயே நடித்துள்ளார்.

மேலும் ஏராளமான டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார் ரிஸபவா. கபூலிவாலா, நேரியன் சிபிஐ, கவர் ஸ்டோரி, அனியன் பாவா சேட்டன் பாவா மற்றும் பலராம் Vs தாரதாஸ் ஆகியவை அவரது குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் ஆகும்.

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

ரிஸபவா மேடை நாடகக் கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். வி.கே.பிரகாஷ் இயக்கிய ஹேம்லெட் தழுவலான கர்மயோகி படத்துக்காக 2010 ஆம் ஆண்டு சிறந்த டப்பிங் கலைஞருக்கான கேரள மாநில விருதை வென்றார் ரிஸபவா.

rishabhava
rishabhava

கடைசியாக மம்மூட்டியுடன் அரசியலை மையப்படுத்தி எடுக்கப்படும் படம் ஒன்றில் நடித்துள்ளார் ரிஸபவா. நடிகர் ரிஸபவா மனைவி, மகள் மற்றும் மருமகனுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் நடிகர் ரிஸபவாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரிஸபவாவுக்கு திடீரென ஸ்ட்ரோக் ஏற்பட்டது.

இதனால் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ரிஸபவா. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று பகல் ரிஸபவா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ரிஸபவாவின் திடீர் மறைவு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவரது மறைவுக்கு மலையாள திரைத்துறை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதேபோல் ரசிகர்களும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

Related articles

Recent articles

spot_img