90% பெண்கள் இந்தியாவில் பயணங்களில் பாதுகாப்பாக உணர்கிறார்கள்: ஆய்வு

Published:

delhimetrotravel6 மும்பை: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடப்பதாக செய்திகள் நாள்தோறும் வெளியாகி வரும் நிலையில், இந்தியாவில் 94 சதத்துக்கும் அதிகமான பெண்கள், தாங்கள் இந்தியாவில் பாதுகாப்பாக பயணப் படுவதாக தெரிவித்துள்ளனர். அண்மைய சர்வே முடிவு ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. ஹாலிடேஐக்யு என்ற அமைப்பு அண்மையில் எடுத்த சர்வேயில், 18-24 வயதுடைய இளம் பெண்கள், தாங்கள் இந்தியாவில் பயணப்படும் போது பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். 92 சத 25-34 வயதுடைய பெண்கள் தாங்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாகவும், 35-44 வயதுடைய 79 சத பெண்களும், 45-54 வயதுடைய பெண்களில் 87 சதவீதம் பேரும், 55-64 வயதுடைய பெண்களில் 47 சதவீதம் பேரும் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். தில்லியில் 71 சத பெண்கள் தாங்கள் பயணங்களில் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். கடற்கரைகள், மலைப்பிரதேசங்கள் தங்களுக்கு மிகவும் பாதுகாப்பான இடங்கள் என்றும், 60 சதம் பேர் அவற்றை விடுமுறையில் கழிக்க விரும்புவதாகவும் கூறியுள்ளனர்.

ALSO READ:  யுபிஐ கட்டணத்துக்கு வரியா? பரவும் வதந்தியும் அரசின் விளக்கமும்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img