கொரோனா தொற்று இல்லாத கிராமம்!

village
village

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்திருக்கும் காவி என்ற கிராமத்தில் இதுவரை ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.

மிகச் சிறந்த வனப் பாதுகாப்பு, சுற்றுச்சூழலுக்கு உகந்த சுற்றுலா என பல்வேறு காரணங்களால் புகழப்படும் இந்த கிராமம் தற்போது மற்றொரு காரணத்துக்காகவும் புகழின் உச்சிக்கே சென்றுள்ளது.

இங்கு 163 பழங்குடியினர்களுடன் சேர்த்து 1000 கிராமத்தினர் வசிக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் இலங்கை தமிழர்கள். இந்த கிராமம் குறித்து அருகே உள்ள சீதாதோடு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஜே. வின்சென்ட் ஸேவியர் கூறுகையில், இங்கிருக்கும் மக்கள் அனைவருமே கொரோனா பரவல் தடுப்பு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றுகிறார்கள்.

அனைவரும் சரியாக முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, அவ்வப்போது கைகளை சுத்தப்படுத்துவது போன்றவற்றை சிறப்பாக செய்கிறார்கள். அவர்கள் நகரப் பகுதிக்குச் செல்வதும் இல்லை. சுகாதாரப் பணியாளர்கள் வாரந்தோறும் இந்த கிராமத்துக்குச் சென்று பரிசோதனை செய்வோம், தற்போதைய நிலையில் அனைவரும் நலமாக இருக்கிறார்கள் என்கிறார்.

இது குறித்து அந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் சந்திரகுமார் கூறுகையில், நாட்டிலோ, மாநிலத்தியே தற்போதைய கொரோனா பெருந்தொற்று பற்றி மக்களுக்கு எதுவும் தெரியாது. இங்கு தொலைக்காட்சி இல்லை. இங்கு தொலைத்தொடர்பு வசதி இல்லாததால் செல்லிடப்பேசியும் கிடையாது. சுகாதாரத் துறை அதிகாரிகள் தான் எங்களுக்கு கரோனா பற்றி எடுத்துக் கூறி வழிகாட்டு நெறிமுறைகளை விளக்கினர். நாங்களும் அதனை சரியாகப் பின்பற்றுகிறோம் என்கிறார்.

ALSO READ:  விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

இரண்டாவது அலையின்போது வெளியில் வேலை செய்து கொண்டிருந்த நபர் கிராமத்துக்குத் திரும்பும் போது அறிகுறி இருந்தது. அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதும், அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். வழிகாட்டுதல்களை சரியாகப் பின்பற்றினார். பிறகு அவருக்கு கொரோனா இல்லை என்று பரிசோதனையில் வந்தது.

தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் பணியும் தொடங்கியுள்ளது. இங்கு இணையதள வசதியோ, தொலைத்தொடர்பு வசதியோ இல்லை என்பதுதான் எங்களுக்கு பெரும் சிக்கலாக உள்ளது என்கிறார்கள் ஊர் மக்கள்.

ஆனால் டிவியோ இணையதள வசதியோ இல்லாததால் கொரோனாவைப் பற்றிய தேவையற்ற செய்திகளும் வதந்திகளும், பீதியை கிளப்பும் செய்திகளும் வந்தடையவில்லை என்பதும் ஆறுதலான உண்மை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

Topics

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

அஸ்ஸாமில் ஆர் எஸ் எஸ் கிளைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று அந்த அமைப்பின் ஆண்டறிக்கை கூறுகிறது. வித்யா பாரதி மூலமாக அந்த மாநிலத்தில் 121 ஆரம்ப பள்ளிகளும் 115 நடுநிலைப் பள்ளிகளும் 341 மேல்நிலைப் பள்ளிகளும் நடத்தப்படுகின்றன. சுமார் இரண்டு லட்சம் மாணவர்கள் இதன்மூலம் பயன் பெறுகின்றனர்.

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

முன்பெல்லாம், அனேகமாக, எல்லோரும் பிரிவினை பேசுவார்கள். இப்போது வெகுவாக குறைந்துவிட்டது. பிரிவினைவாதத்தை எதிர்த்து பேசாமல் இருக்க காரணம் பிரிவினைவாதிகளிடம் இருக்கும் துப்பாக்கிதான். தேசியம், தேசபக்தி வளர்ந்து விட்டது என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் யாரும் சீனாவுடனோ பங்களாதேஷுடனோ இணைவதை விரும்பவில்லை

Entertainment News

Popular Categories