புது தில்லி: நிலம் கையகப் படுத்தும் சட்டத்துக்கு எதிராக வரும் 17ம் தேதி தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி பேரணி செல்ல இருப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் மத்திய அரசு சில திருத்தங்களைக் கொண்டு வந்தது. ஆனால் அவை தொழிலதிபர்களுக்கு மட்டுமே சாதகமாக இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள எதிர்க்கட்சிகள், தங்கள் பாணியில் போராட்டங்களை நடத்தி வருகின்றன. பீகாரில் இன்று ஐக்கிய ஜனதா தள தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் உண்ணாவிரதம் இருக்கிறார். நாளை லாலு பிரசாத் யாதவ் பீகார் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்த திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், தில்லியில் எதிர்க் கட்சிகள் ஒன்று சேர்ந்து குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி வரும் மார்ச் 17 செவ்வாய்க்கிழமைஅன்று பேரணி நடத்த முடிவு செய்துள்ளன. காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்ட், கேரளா காங்கிரஸ் ஆகிய 8 கட்சிகள் இந்த பேரணியில் கலந்து கொள்கின்றன. காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில் இந்தப் பேரணி நடைபெற உள்ளது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் தலைவர்கள், எம்.பி.க்கள் பங்கேற்க உள்ளாராம்.
நிலம் கையகப் படுத்தும் சட்டம்: காங்கிரஸ் 17ம் தேதி பேரணி
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

