ரேணுகாவுக்கு சூர்ப்பனகை என பதிலடி கொடுத்த மோடிக்கு எதிராக அவையை முடக்கிய காங்கிரஸார்

புதுதில்லி:

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு கடந்த மாதம் 29ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்து முடிந்ததை அடுத்து, பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் முக்கிய மசோதாக்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப் பட்டுள்ளன.

நேற்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேசிய போது, அவரைப் பேச விடாமல் காங்கிரஸ் எம்.பி. ரேணுகா சவுத்ரி சத்தம் போட்டு சிரித்துக் கொண்டிருந்தார். இதனால் அவை நடவடிக்கைகள் மட்டுப் பட்டன. மோடி பேச இயலாமல் கூச்சல் ஏற்பட்டது. இந்நிலையில், ரேணுகா பெயரை குறிப்பிட்டு, அவைத்தலைவர் வெங்கய்ய நாயுடு கையமர்த்தினார். ஆனால் தொடர்ந்து ரேணுகா சிரித்துக் கொண்டே இருந்தார்.

இந்நிலையில், அவரை சிரிக்க விடுங்கள் என்று கூறிய மோடி, ராமாயணத்தில் சூர்ப்பனகை சிரித்தாள். அதன் பின்னர் அப்படி ஒரு சிரிப்பை இப்போதுதான் கேட்பதாகக் கூறினார். இதனைக் கேட்டதும் பாஜக., எம்பி.,க்கள் பலத்த சிரிப்பொலி எழுப்பினர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்த விவகாரத்தை இன்று கையில் எடுத்த காங்கிரஸ் எம்.பி.க்கள், மாநிலங்களவையில் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்.

இதனால் அவையை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, மாநிலங்களவை பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. 12 மணிக்கு அவை கூடியபோதும் இதே நிலை நீடித்தது. இதனால் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories