சிகிச்சை முடிந்து தில்லி புறப்பட்டார் கேஜ்ரிவால்

Published:

பெங்களூரு: உடல் நலக் குறைவு காரணமாக சிகிச்சை எடுத்துக்கொள்ள பெங்களூரு வந்திருந்த தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், சிகிச்சை நிறைவடைந்ததைத் தொடர்ந்து தில்லி புறப்பட்டுச் சென்றார். அவருக்கு சர்க்கரை அளவு கட்டுக்குள் உள்ளது. தொடர் இருமலும் குணமானதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சர்க்கரை நோய் மற்றும் தொடர் இருமல் காரணமாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சிரமப்பட்டு வந்தார். பின்னர், மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக அவர் கடந்த 5-ந்தேதி தில்லியில் இருந்து பெங்களூரு வந்தார். அங்கே ஜிண்டால் இயற்கை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு இயற்கை மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. யோகா, சுவாச பயிற்சி, கட்டுப்பாடான உணவு வகைகள், மூலிகை சாறு என இயற்கை முறையில் 12 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்றார். அவருடைய உடல்நலம் சீரானதை அடுத்து நேற்று பிற்பகல் 3 மணியளவில் கார் மூலம் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்துக்குச் சென்று அங்கிருந்து விமானம் மூலம் தில்லி புறப்பட்டு சென்றார்.

ALSO READ:  புதிய விடியலுக்கு அச்சாரம்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img