சென்னை:
கோடைகாலம் தொடங்கும் நிலையில் தண்ணீர் பந்தல் திறக்குமாறு தொண்டர்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழக மக்கள் இந்தக் கோடையைச் சமாளிப்பதற்கு தேமுதிகவினர் தம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூராட்சி ஆகிய இடங்களில் தண்ணீர் பந்தல்கள் அமைத்து, குடிநீர், நீர்மோர், தர்ப்பூசணி, போன்றவற்றை மக்களுக்கு வழங்கி தாகத்தைத் தணிக்க வேண்டும். தேமுதிக நிர்வாகிகள் கோடை முழுவதும் இந்தப் பணியைச் செய்ய வேண்டும், என்று அவர் கூறியுள்ளார்.


