சர்வதேச விவகாரங்கள் குறித்து மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு

புது தில்லி:

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், மாலத்தீவு, ஆப்கானிஸ்தான், வடகொரியா உள்ளிட்ட சர்வதேச விவகாரங்கள் குறித்து பேசியுள்ளார். இதனை வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

அமெரிக்க அதிபர் பிரதமர் மோடியுடன் நடத்திய தொலைபேசி உரையாடல் குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில், இந்திய பிரதமர் நரேந்தி மோடியும் அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்பும் வியாழக்கிழமை (பிப்,8) தொலைபேசியில் பேசினர். அப்போது இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி திட்டங்களைத் தொடர்வது குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், மாலத்தீவில் ஜனநாயக ரீதியான நடைமுறைகள் பாதுகாக்கப்பட வேண்டும், நீதித்துறையின் அதிகாரம் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பது குறித்தும் விவாதிக்கப் பட்டது. ஆப்கன் பாதுகாப்பில் இந்தியாவும் அமெரிக்காவும் தங்கள் பங்களிப்பை தொடர்ந்து செலுத்தவ முடிவு செய்யப்பட்டது. வடகொரியாவில் அணு ஆயுதக் குறைப்பை உறுதி செய்ய ஆலோசனை நடத்தினார் டிரம்ப்.

அடுத்து இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.

மியான்மரில் ரோஹிங்கியாக்களுக்கு முழு குடியுரிமை இல்லாத நிலையில், அங்கே பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளது. ரோஹிங்க்யா அகதிகளின் நிலைப்பாடு குறித்தும் இருவரும் கருத்துக்களை பரிமாறினர். – இவ்வாறு வெள்ளை மாளிகை செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

இதனிடையே பிரதமர் மோடி இன்று பாலஸ்தீனம் மற்றும் ஜோர்டானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

Topics

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Entertainment News

Popular Categories