உத்தரகாண்டில் பஸ்விபத்து-பலி 26ஆக உயர்வு..

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Published:

உத்தரகாண்டில் பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று, பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26ஆக உயர்ந்துள்ளது.

uthragand - 2026
mcms 1 - 2026
c48095a3d1db29453e0e7789de6d386f original - 2026

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தை சேர்ந்த 28 பேர், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சார்தாம் புனித யாத்திரைக்கு பேருந்தில் சென்றனர். உத்தர்காசி மாவட்டம் டாம்டா அருகே சென்ற போது பேருந்து பள்ளத்தாக்கில் கவிந்து விபத்துக்குள்ளானது. இதில், 22 பேர் உயிரிழந்த நிலையில், 6 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்களில் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 26ஆக அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில், மேலும் 2 பேரை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், நேரில் சென்று காயமடைந்தோருக்கு ஆறுதல் கூறினார். மேலும், உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாயும், காயமடைந்தோருக்கு தலா 50 ஆயிர‌மும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தரகாண்ட் விபத்தில் உயிரிழந்த 26 பேரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

உத்தரகாண்ட் பேருந்து விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். உத்தரகாண்ட் பேருந்து விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000மும் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். ராகுல் காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், உத்தரகாண்டில் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது சென்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன். விபத்தில் உயிரிழந்த 22 பேரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். விபத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய வேண்டுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Related articles

Recent articles

spot_img