May 24, 2025, 11:38 AM
31.8 C
Chennai

செப் 17இல் ஐதராபாத் 75-ம் ஆண்டு விடுதலை தினம்:

images 2022 09 04T154729.416

நிஜாமின் பிடியில் இருந்து ஐதராபாத் விடுதலை பெற்று 75 ஆண்டுகள் ஆகிறது. வரும் 17ம் தேதியில் இருந்து ஓராண்டு ஐதராபாத் விடுதலை தினத்தை கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நாடு சுதந்திரம் அடைந்து 1947-ம் ஆண்டு 15-ந்தேதிக்கு பின்னரும் பல சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணைய மறுத்தன. அந்த சமஸ்தானங்களை அப்போது மத்திய உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேல் ராணுவ நடவடிக்கை மூலம் இந்தியாவுடன் இணைத்தார்.

அப்படி ராணுவ நடவடிக்கை மூலம் இணைக்கப்பட்ட ஒரு சமஸ்தானம்தான் ஐதராபாத். அந்த மாகாணத்தை அப்போது ஐதராபாத் நிஜாம் ஆண்டு வந்தார். சர்தார் வல்லபாய் படேலின் ராணுவ நடவடிக்கை காரணமாக 1948ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி ஐதராபாத் விடுதலை பெற்றது. அப்போதைய ஐதராபாத் சமஸ்தானத்தின் கீழ் இப்போதைய தெலுங்கானா மாநிலம் முழுவதும், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களின் சில பகுதிகளும் இருந்தன.

ALSO READ:  IPL 2025: பந்துகளை பஞ்சாய் பறக்கவிட்ட பஞ்சாப் அணிம!

நிஜாமின் பிடியில் இருந்து ஐதராபாத் விடுதலை பெற்று 75 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி, வரும் 17ம் தேதியில் இருந்து ஓராண்டு ஐதராபாத் விடுதலை தினத்தை கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான தொடக்க விழா ஐதராபாத்தில் வரும் 17ம் தேதி நடக்க உள்ளது.

அதில் மத்திய மந்திரி அமித்ஷா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இந்த தகவலை மத்திய கலாச்சார துறை மந்திரி கிஷன் ரெட்டி தெரிவித்தார். இது தொடர்பாக, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், கர்நாடகா முதல்வர் பசவ ராஜ் பொம்மை, மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோருக்கு கடிதம் எழுதி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா விடுதலை பெற்ற ஓராண்டு கழித்துதான் தெலுங்கானா மாநிலத்தை முழுமையாகவும், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவின் சில மாவட்டங்களையும் உள்ளடக்கிய ஐதராபாத் சமஸ்தானம் விடுதலை பெற்றது.

நிஜாமின் கொடுங்கோன்மை ஆட்சியில் இருந்து ஐதராபாத் 1948ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி விடுதலை பெற்றது. ஐதராபாத் விடுதலைபெற்று 75 ஆண்டுகள் ஆவதை ஓராண்டு முழுவதும் விழாவாகக் கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ALSO READ:  ‘காமெடியன்’ ஆகிப்போன அதிபர் டிரம்ப்! இந்தியர்களால் ட்ரோல் செய்யப்படுவது ஏன்? 

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடக்கும் இந்த விழாவில் பங்கேற்குமாறு உங்களை அழைக்கிறோம். ஐதராபாத் விடுதலை பெற்ற வரலாற்றை இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடனும், இந்த போராட்டம் தொடர்பான எதிர்ப்பு, வீரம், தியாகத்தை பற்றியும் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடனும் இந்த கொண்டாட்டம் நடக்க உள்ளது, இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

ஐதராபாத் விடுதலை நாள் தெலுங்கானா விடுதலை நாள் என்றும் அழைக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

IPL 2025: பெங்களூர் அணிக்கு சவால் கொடுத்த இஷான் கிஷன்

பிளேஆஃப் சுற்றில் விளையாடப்போகும் அணிகள் எவை என்பது முடிவாகிவிட்டபோதும் எந்த அணி எந்த அணியோடு மோதப்போகிறது எ

கோயில் முன்னால செம ட்ராஃபிக்: சரி பண்ணுங்கப்பா!

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு ஏற்படும் கடும் போக்குவரத்து நெருக்கடிால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கடும் அவதி:

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கும்பாபிஷேகத்துக்கு முகூர்த்தக்கால் நடல்!

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை மண்டப முகூர்த்தக்கால் நடும் விழா

இது குழந்தைத் தனமானதா என்ன?

*எத்தனை போர் விமானங்களை இந்தியா இழந்தது? ராகுல் காந்தியின் பாப்பா கேள்வி*        *--...

திமுக.,வின் அநாகரிக பேச்சு, ஜாதிய வன்மத்திற்கு இந்து முன்னணி கண்டனம்!

திமுகவின் அநாகரிக பேச்சு மற்றும் ஜாதிய வன்மத்திற்கு இந்து முன்னணி கண்டனம்...

Topics

IPL 2025: பெங்களூர் அணிக்கு சவால் கொடுத்த இஷான் கிஷன்

பிளேஆஃப் சுற்றில் விளையாடப்போகும் அணிகள் எவை என்பது முடிவாகிவிட்டபோதும் எந்த அணி எந்த அணியோடு மோதப்போகிறது எ

கோயில் முன்னால செம ட்ராஃபிக்: சரி பண்ணுங்கப்பா!

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு ஏற்படும் கடும் போக்குவரத்து நெருக்கடிால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கடும் அவதி:

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கும்பாபிஷேகத்துக்கு முகூர்த்தக்கால் நடல்!

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை மண்டப முகூர்த்தக்கால் நடும் விழா

இது குழந்தைத் தனமானதா என்ன?

*எத்தனை போர் விமானங்களை இந்தியா இழந்தது? ராகுல் காந்தியின் பாப்பா கேள்வி*        *--...

திமுக.,வின் அநாகரிக பேச்சு, ஜாதிய வன்மத்திற்கு இந்து முன்னணி கண்டனம்!

திமுகவின் அநாகரிக பேச்சு மற்றும் ஜாதிய வன்மத்திற்கு இந்து முன்னணி கண்டனம்...

வால்மீகி ராமாயணத்தில் உத்தர காண்டம் உள்ளதா?!

உத்தர காண்டத்தோடுதான் ராமாயணம் முழுமையடைகிறது. ராமாயணம் ஏழு காண்டங்களால் ஆனதென்று வால்மீகி தெளிவாகக் கூறியுள்ளார்.

IPL 2025: ‘தேறிய’ அந்த நான்கு அணிகள்!

நேற்றைய மும்பை-டெல்லி போட்டியின் முடிவில் பிளேஆஃப் சுற்றுக்குச் செல்லும் நான்கு அணிகள் முடிவாகிவிட்டன. அவை குஜராத், பெங்களூரு, பஞ்சாப், மும்பை ஆகிய அணிகளாகும்.

பஞ்சாங்கம் மே 23 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories