தில்லி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை காலி செய்ய நோட்டீஸ்

congress-office-delhi-akbar-roadபுது தில்லி: புது தில்லியில் காங்கிரஸ் கட்சி இயங்கிவரும் அலுவலகத்தை காலி செய்யும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 1978-ம் ஆண்டு முதல் தில்லியின் முக்கியப் பகுதிகளில் ஒன்றான அக்பர் ரோடில் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக உரிமத்தைப் புதுப்பித்துக் கொண்டு வந்து, இதுவரை கட்சி அலுவலகம் இயங்கி வந்தது. ஆனால், தற்போது நகர வளர்ச்சித் துறை சார்பில் அந்தக் கட்டடத்தை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி அலுவலகம், சேவா தள கட்டடம், இளைஞர் காங்கிரஸ் அலுவலகம் மற்றும் தில்லி சாணக்கியாபுரி பகுதியில் உள்ள பங்களா ஆகிய கட்டங்களையும் காலி செய்து தருமாறு அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2013 ஜூன் 26 ஆம் தேதியுடன் அக்பர் ரோடில் உள்ள கட்டடத்தை பயன்படுத்துவதற்கான காலக்கெடு முடிந்து விட்டது. எனவே, தற்போது வரை அந்தக் கட்டடத்தைப் பயன்படுத்தியதற்கான உரிமக் கட்டணத்தை காங்கிரஸ் கட்சி செலுத்த வேண்டும் எனவும் நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது. அரசின் இந்த நோட்டீஸ் குறித்து விரைவில் பதில் அனுப்பவுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மோதிலால் ஓரா தெரிவித்துள்ளார். முன்னதாக, காங்கிரஸ் கட்சிக்கு புதிய கட்டடம் கட்டுவதற்காக ஐ.மு.கூ. ஆட்சியி்ன் போது ரவுஸ் அவென்யூ பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டது. கட்சித் தலைவர் சோனியா காந்தி புதிய கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். இருப்பினும் கட்சித் தலைமையகம் தொடர்ந்து அக்பர் ரோடிலேயே இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

Topics

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

Entertainment News

Popular Categories