மார்ச் 13ல் இலங்கை செல்கிறார் பிரதமர் மோடி

narendramodi புது தில்லி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசு முறைப் பயணமாக வரும் மார்ச்- 13 ஆம் தேதி இலங்கைக்குச் செல்கிறார். இந்தத் தகவலை இலங்கை அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன வியாழன் அன்று அறிவித்தார். இலங்கை பயணத்தை முடித்துக்கொண்டு மார்ச்15 ஆம் தேதி மோடி இந்தியா திரும்பவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர், அதாவது 27 ஆண்டுகளுக்குப் பின்னர் அரசு முறைப் பயணமாக அண்டை நாடான இலங்கை செல்லும் இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி இருப்பார். காரணம், 1987 ஆம் ஆண்டு அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கைக்கு அரசு முறைப் பயணமாகச் சென்றபோது, அப்போதைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேவுடன் இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அந்தப் பயணத்தின் முடிவில் அரசு ராணுவ மரியாதையை ஏற்றுக் கொண்டிருந்தபோது, இலங்கை ராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கியின் பின்புறக் கட்டையால் தாக்கப்பட்டார். இந்தச் சம்பவம் அப்போது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்துக்குப் பின்னர் இந்தியப் பிரதமர்கள் எவரும் அரசு முறைப் பயணமாக இலங்கைக்குச் செல்லவில்லை. ராஜீவ் காந்திக்குப் பிறகு இந்தியப் பிரதமர்கள் சிலர் இலங்கைக்குச் சென்றிருந்தாலும் அவர்கள் தங்கள் தனிப்பட்ட பயணமாகத்தான் சென்றிருக்கிறார்களே தவிர, அரசு முறைப் பயணமாக அவை அமையவில்லை. குறிப்பாக, இலங்கையில் நடந்த சர்வதேச மாநாடுகளில் கலந்து கொள்வதற்கான பயணங்களாகவே அவை அமைந்திருந்தன. கடந்த 2008-இல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் கொழும்பில் நடந்த சார்க் மாநாட்டில் கலந்துகொண்டு சார்க் அமைப்பின் தலைமைப் பொறுப்பை அப்போதைய இலங்கை அதிபர் மஹிந்த ராஜபட்சவிடம் அளித்தார். இருப்பினும், பின்னர் வந்த 2013 காமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் சில அரசியல் பிரச்னைகளால் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில், இலங்கையின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மைத்ரிபால சிறீசேன, பதவியேற்ற பின்னர் தனது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கு வந்தார். அப்போது, இந்தியா இலங்கைக்கு இடையிலான அணுசக்தி ஒத்துழைப்பு உள்ளிட்ட பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதன் பின்னர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இலங்கைக்கு வருமாறு அவர் அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை ஏற்றுக்கொள்வதாக இந்தியா தெரிவித்தது. இந்நிலையில், வரும் மார்ச் 13ம் தேதி மோடி இலங்கை செல்வதாக அவரது பயணத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஏபிவிபி., மாணவர்கள் மீது விசிக.,வினரின் கண்மூடித்தன தாக்குதலுக்கு கண்டனம்!

அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கை; இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி பதில்!

எங்கள் விரல் இன்னும் துப்பாக்கி விசையில்தான் இருக்கிறது. எந்த நேரத்திலும் போருக்குத் திரும்ப நாங்கள் தயார். ஈரான் இப்போது மிகவும் பலவீனமாக உள்ளது, அதை நாங்கள் சரியாகப் பயன்படுத்துவோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 9 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

Topics

ஏபிவிபி., மாணவர்கள் மீது விசிக.,வினரின் கண்மூடித்தன தாக்குதலுக்கு கண்டனம்!

அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கை; இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி பதில்!

எங்கள் விரல் இன்னும் துப்பாக்கி விசையில்தான் இருக்கிறது. எந்த நேரத்திலும் போருக்குத் திரும்ப நாங்கள் தயார். ஈரான் இப்போது மிகவும் பலவீனமாக உள்ளது, அதை நாங்கள் சரியாகப் பயன்படுத்துவோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 9 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

ஐபிஎல் 2026: எங்கே போகிறது சென்னை அணியின் பயணம்?

சென்ணையில் நடந்த இந்தாஅட்டத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி பரிதாபமாகத் தோல்வியடைந்தது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories