மார்ச் 13ல் இலங்கை செல்கிறார் பிரதமர் மோடி

narendramodi புது தில்லி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசு முறைப் பயணமாக வரும் மார்ச்- 13 ஆம் தேதி இலங்கைக்குச் செல்கிறார். இந்தத் தகவலை இலங்கை அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன வியாழன் அன்று அறிவித்தார். இலங்கை பயணத்தை முடித்துக்கொண்டு மார்ச்15 ஆம் தேதி மோடி இந்தியா திரும்பவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர், அதாவது 27 ஆண்டுகளுக்குப் பின்னர் அரசு முறைப் பயணமாக அண்டை நாடான இலங்கை செல்லும் இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி இருப்பார். காரணம், 1987 ஆம் ஆண்டு அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கைக்கு அரசு முறைப் பயணமாகச் சென்றபோது, அப்போதைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேவுடன் இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அந்தப் பயணத்தின் முடிவில் அரசு ராணுவ மரியாதையை ஏற்றுக் கொண்டிருந்தபோது, இலங்கை ராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கியின் பின்புறக் கட்டையால் தாக்கப்பட்டார். இந்தச் சம்பவம் அப்போது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்துக்குப் பின்னர் இந்தியப் பிரதமர்கள் எவரும் அரசு முறைப் பயணமாக இலங்கைக்குச் செல்லவில்லை. ராஜீவ் காந்திக்குப் பிறகு இந்தியப் பிரதமர்கள் சிலர் இலங்கைக்குச் சென்றிருந்தாலும் அவர்கள் தங்கள் தனிப்பட்ட பயணமாகத்தான் சென்றிருக்கிறார்களே தவிர, அரசு முறைப் பயணமாக அவை அமையவில்லை. குறிப்பாக, இலங்கையில் நடந்த சர்வதேச மாநாடுகளில் கலந்து கொள்வதற்கான பயணங்களாகவே அவை அமைந்திருந்தன. கடந்த 2008-இல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் கொழும்பில் நடந்த சார்க் மாநாட்டில் கலந்துகொண்டு சார்க் அமைப்பின் தலைமைப் பொறுப்பை அப்போதைய இலங்கை அதிபர் மஹிந்த ராஜபட்சவிடம் அளித்தார். இருப்பினும், பின்னர் வந்த 2013 காமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் சில அரசியல் பிரச்னைகளால் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில், இலங்கையின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மைத்ரிபால சிறீசேன, பதவியேற்ற பின்னர் தனது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கு வந்தார். அப்போது, இந்தியா இலங்கைக்கு இடையிலான அணுசக்தி ஒத்துழைப்பு உள்ளிட்ட பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதன் பின்னர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இலங்கைக்கு வருமாறு அவர் அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை ஏற்றுக்கொள்வதாக இந்தியா தெரிவித்தது. இந்நிலையில், வரும் மார்ச் 13ம் தேதி மோடி இலங்கை செல்வதாக அவரது பயணத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 16 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

Topics

பஞ்சாங்கம் மே 16 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

Entertainment News

Popular Categories