December 5, 2025, 3:40 PM
27.9 C
Chennai

ரெபோ வட்டி விகிதம் மாற்றமில்லை!

rbi governor sakthi kantha das - 2025
#image_title

ரெபோ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை என அறிவித்துள்ள ரிசர்வ் வங்கி, 2024 ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.5 சதவீதமாக இருக்கும் என்று கணித்துள்ளது. சுமார் ₹ 1.8 லட்சம் கோடி மதிப்புள்ள ₹ 2,000 நோட்டுகள் மீண்டும் வங்கி முறைக்கு திரும்பியிருப்பதாக RBI ஆளுநர் சக்தி காந்த தாஸ் கூறினார்.

மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் ஆர்பிஐ நிதிக் கொள்கை குறித்து கூறியபோது…

சர்வதேச பொருளாதார நிலை சிக்கலில் இருந்தாலும், இந்திய பொருளாதாரம் மற்றும் நிதித்துறை வலிமையாகவும், துடிப்புடனும் உள்ளது என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

ரெபோ வட்டி வகிதத்தில் மாற்றம் கிடையாது என்று குறிப்பிட்ட அவர், அது 6.5 சதவீதமாகவே நீடிக்கிறது என்றார். மேலும், பணவீக்க உயர்வை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று குறிப்பிட்ட அவர், மொத்த பணவீக்க உயர்வு 4 சதவீதமாக நீடித்து வருகிறது. ஆண்டு முழுவதும் இப்படியே இருக்கும் என்றே கணித்துள்ளோம் என குறிப்பிட்டார்.

உலக அரசியல் நிலவரம் காரணமாக, பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்துள்ளது என்றும், உள்நாட்டு தேவை நிலை, வளர்ச்சிக்கு ஆதரவாக இருக்கிறது, அந்நிய செலாவணி போதுமான அளவு கையிருப்பில் உள்ளது என்று நம்பிக்கை தரும் தகவல்களைக் குறிப்பிட்டார்.

இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 8 சதவீதமாக இருக்கும். 2ம் காலாண்டில் 6.5 சதவீதமாகவும், 3ம் காலாண்டில் 6 சதவீதமாகவும், 4ம் நிதியாண்டில் 5.7 சதவீதமாகவும் இருக்கும் என்றும், 2024ம் நிதியாண்டில் 6.5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

சுமார் 50% அல்லது ₹1.8 லட்சம் கோடி மதிப்புள்ள ₹2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பி வந்துவிட்டன என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்தார்.

புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளில் 50% வங்கிகளில் திரும்பி வந்துவிட்டது. இவற்றை புழக்கத்தில் இருந்து நீக்குவதாக மத்திய வங்கி அறிவித்த பிறகு இதுவரை ₹1.8 லட்சம் கோடி மதிப்புள்ள ₹2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பி வந்துள்ளதாக அவர் கூறினார். இது மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி புழக்கத்தில் உள்ள மொத்த ரூபாய் 3.62 லட்சம் கோடி மதிப்புள்ள நோட்டுகளில் 50% ஆகும்.

எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப, 85% ரூபாய் 2,000 கரன்சி நோட்டுகள் வங்கிக் கணக்குகளில் டெபாசிட்டாக திரும்பி வருவதாக தாஸ் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories