ரெபோ வட்டி விகிதம் மாற்றமில்லை!

rbi governor sakthi kantha das - 2026
#image_title

ரெபோ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை என அறிவித்துள்ள ரிசர்வ் வங்கி, 2024 ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.5 சதவீதமாக இருக்கும் என்று கணித்துள்ளது. சுமார் ₹ 1.8 லட்சம் கோடி மதிப்புள்ள ₹ 2,000 நோட்டுகள் மீண்டும் வங்கி முறைக்கு திரும்பியிருப்பதாக RBI ஆளுநர் சக்தி காந்த தாஸ் கூறினார்.

மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் ஆர்பிஐ நிதிக் கொள்கை குறித்து கூறியபோது…

சர்வதேச பொருளாதார நிலை சிக்கலில் இருந்தாலும், இந்திய பொருளாதாரம் மற்றும் நிதித்துறை வலிமையாகவும், துடிப்புடனும் உள்ளது என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

ரெபோ வட்டி வகிதத்தில் மாற்றம் கிடையாது என்று குறிப்பிட்ட அவர், அது 6.5 சதவீதமாகவே நீடிக்கிறது என்றார். மேலும், பணவீக்க உயர்வை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று குறிப்பிட்ட அவர், மொத்த பணவீக்க உயர்வு 4 சதவீதமாக நீடித்து வருகிறது. ஆண்டு முழுவதும் இப்படியே இருக்கும் என்றே கணித்துள்ளோம் என குறிப்பிட்டார்.

உலக அரசியல் நிலவரம் காரணமாக, பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்துள்ளது என்றும், உள்நாட்டு தேவை நிலை, வளர்ச்சிக்கு ஆதரவாக இருக்கிறது, அந்நிய செலாவணி போதுமான அளவு கையிருப்பில் உள்ளது என்று நம்பிக்கை தரும் தகவல்களைக் குறிப்பிட்டார்.

ALSO READ:  ஐபிஎல் 2026: சஞ்சு சாம்சனால் தேறும் சென்னை அணி!

இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 8 சதவீதமாக இருக்கும். 2ம் காலாண்டில் 6.5 சதவீதமாகவும், 3ம் காலாண்டில் 6 சதவீதமாகவும், 4ம் நிதியாண்டில் 5.7 சதவீதமாகவும் இருக்கும் என்றும், 2024ம் நிதியாண்டில் 6.5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

சுமார் 50% அல்லது ₹1.8 லட்சம் கோடி மதிப்புள்ள ₹2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பி வந்துவிட்டன என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்தார்.

புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளில் 50% வங்கிகளில் திரும்பி வந்துவிட்டது. இவற்றை புழக்கத்தில் இருந்து நீக்குவதாக மத்திய வங்கி அறிவித்த பிறகு இதுவரை ₹1.8 லட்சம் கோடி மதிப்புள்ள ₹2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பி வந்துள்ளதாக அவர் கூறினார். இது மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி புழக்கத்தில் உள்ள மொத்த ரூபாய் 3.62 லட்சம் கோடி மதிப்புள்ள நோட்டுகளில் 50% ஆகும்.

எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப, 85% ரூபாய் 2,000 கரன்சி நோட்டுகள் வங்கிக் கணக்குகளில் டெபாசிட்டாக திரும்பி வருவதாக தாஸ் கூறினார்.

ALSO READ:  T20 WC 2026: வெற்றிக் கோப்பையும்; விறுவிறுப்பு நிமிடங்களும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories