IPL 2024: கொல்கத்தாவை பந்து வீச்சில் சாய்த்த சென்னை!

ipl 2024 - 2026

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

பதினெட்டாம் நாள்:

ஐபிஎல் 2024 – – சென்னை

கொல்கொத்தா நைட் ரைடர் vs சென்னை சூப்பர் கிங்ஸ்

கொல்கொத்தா அணியை (137/9, ஷ்ரேயாஸ் ஐயர் 34, சுனில் நரேன் 27, ரகுவன்ஷி 24, துஷார் தேஷ்பாண்டே 3/33, ஜதேஜா 3/18) சென்னை அணி (17.4 ஓவரில் 141/3 ருதுராஜ் கெய்க்வாட் 67*, ஷிவம் துபே 28, மிட்சல் 25, ரச்சின் ரவீந்த்ரா 15, வைபவ் அரோரா 2/28, சுனில் நரேன் 1/30) 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

இன்று சென்னையில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கும் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற சென்னை அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. கொல்கொத்தா அணி தொடக்கம் முதலே தடுமாறியது. சென்ற ஆட்டத்தில் 272 ரன் அடித்த அணியா இது? என நினைக்கத்தூண்டும் வகையில் அவர்களின் ஆட்டம் இருந்தது. பில் சால்ட் முதல் பந்தில் கோல்டன் டக் அவுட் ஆனார். பவர்ப்ளே முடிவில் (அதாவது 6.1ஆவது ஓவரில்) அங்கிருஷ் ரகுவன்ஷி 18 பந்துகளில் 24 ரன் அடித்து ஆட்டம் இழந்தார். சுனில் நரேன் 20 பந்துகளில் 27 ரன் அடித்து 6.5ஆவது ஓவரில் அவுட்டானார்.

அதன் பின்னர் வெங்கடேஷ் ஐயர் (3 ரன்), ரமன்தீப் சிங் (13 ரன்), ரிங்கு சிங் (9 ரன்), ஆண்ட்ரூ ரசல் (10 ரன்) ஸ்டார்க் (பூஜ்யம்) ஆகியோர் நிலைத்து நிற்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஸ்ரேயாஸ் ஐயர் 19.1 ஓவர் வரை ஆடியும் அதிரடியாக ஆட முடியவில்லை. அவர் 32 பந்துகளில் 34 ரன் எடுத்தார். இவ்வாறு தட்டுத்தடுமாறி 20 ஓவரில் கொல்கொத்தா அணி 9 விக்கட் இழப்பிற்கு 137 ரன் எடுத்தது. ரவீந்தர் ஜதேஜா மிகச் சிறப்பாக பந்துவீசினார் (4 ஓவர், 18 ரன், 3 விக்கட்). 

138 ரன் என்ற சுலபமான இலக்கை அடைய இரண்டாவதாக ஆட வந்த சென்னை அணியின் தொடக்க வீரர் ரச்சின் ரவீந்திரா 3.2ஆவது ஓவரில் 15 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரும் அணித்தலைவருமான ருதுராஜ் கெய்க்வாட் இறுதி வரை ஆடி 67 ரன்கள் சேர்த்தார். டேரில் மிட்சல் 19 பந்துகளில் 25 ரன்னும் ஷிவம் துபே 18 பந்துகளில் 28 ரன்னும் அடித்தனர்.

தோனி கடைசி 3 பந்துகளுக்காக மைதானத்திற்கு பேட்டிங் செய்ய வந்து ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்தார். கொல்கொத்தா அணியின் பந்துவீச்சாளர்கள் எவரும் சொல்லிக்கொள்ளும்படி பந்துவீசவில்லை.   

அணியின் ரவீந்த்ர ஜதேஜா தன்னுடைய சிறப்பான பந்துவீச்சிற்காக ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். நாளை முல்லன்பூரில் பஞ்சாப் கிங்க்ஸ் அணிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.   

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

Topics

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Entertainment News

Popular Categories